மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++

ஏய் ! பங்களா கோமானே !

எதைக் கொன்றாய் இன்று ?

எதைச் சுட்டாய் இன்று ?

புலி வேட்டை ஆடப்

போனாய் நீ நேற்று

யானை மீதேறி,

துப்பாக்கி நீட்டிக் கொண்டு !

விபத்து நேர்ந்தால் துணைக்கு

தாயைக் கூட்டிச் சென்றாய்

தனக்கு !

அமெரிக்கன்,

ஆங்கிலோ சாக்ஸன் அன்னைக்குப்

புதல்வன் !

துப்பாக்கி யோடு பிறந்தவன் !

பிள்ளைகள் யாவும் சேர்ந்து பாடின :

ஏய் ! பங்களா கோமானே !

எதைக் கொன்றாய் இன்று ?

எதைச் சுட்டாய் இன்று ?

இருண்ட காட்டில் தீக்கண்கள்

சுருட்டி

படுத்துக் கிடந்த வேங்கை விழித்து

வெடுக்கெனப் பாய்ந்தது !

மிரண்டு போனது யானை !

கோமான்

அரண் டெழுந்தான் !

கூலி ஆட்கள் அலறி ஓடினர் !

கோமான் நெற்றிப் பொட்டில்

வேங்கை அடி விழுந்தது !

பிள்ளைகள் யாவும் சேர்ந்து பாடின :

ஏய் ! பங்களா கோமானே !

எதைக் கொன்றாய் இன்று ?

எதைச் சுட்டாய் இன்று ?

பிள்ளைகள் நின்று கேட்டன :

கோமானே !

கொல்வது பாபம் அல்லவா ?

காயப் பட்ட மகனுக் காகப் பேசத்

தாயே குறுக்கிட்டாள் :

மகனிடம்

துப்பாக்கி இல்லாது போனால்,

இப்போது

புலிக்குப் பலியாகி இருப்போம்

நாங்கள் யாவரும் !

பிள்ளைகள் யாவும் சேர்ந்து கேட்டன :

துப்பாக்கி கோமானே !

இப்போது செத்தது எது ?

தப்பிப் பிழைத்தது எது ?

+++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *