வே.சுமதி

 

அர்த்தமற்ற நிலையில்

அறுந்து விழுகின்றன

சபிக்கப்பட்ட வார்த்தைகள்….

மந்திர நாடகங்கள்

தினந்தோறும் அரங்கேற்றம்

செய்யப்படுகின்றது

நகர வீதிகளில்….

ஆத்திச்சூடியின்

மூச்சுக்காற்றில்

கொஞ்சமாய் கொதித்துக்கொண்டிருக்கிறன

வரலாற்றின் எஞ்சங்கள்…

சர்வ காலமும்

ஆகாயத்தின்

அந்தப்புரத்திலிருந்து

ஏதோ ஒன்று

பந்தெனத் துள்ளிக்குதிக்கிறது…

வானத்தில் கொஞ்சும்

விண்மீன்களை

ரசித்தபடி

லயித்திருக்கிறது

யாருமற்ற இந்த இரவு….

கணத்த இதயம்

இளஞ்சூட்டில்

மிதமான தென்றல் காற்றோடு

காத்துக்கொண்டேயிருக்கிறது..

நிலாவில்

வடை சூடும் பாட்டியோடு

விளையாட…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *