முனைவர்.சுமதி

கவிஞர் பற்றிய குறிப்பு: நிசப்தத்தின் மொழி என்னும் கவிதை நூலின் ஆசிரியர். கவிதைப்புலமையை பாராட்டும் விதமாக கடந்த 18.11.2017 அன்று தினமலர் நாளிதழில் கோவைப்பதிப்பில் என்னுடைய நேர்காணல் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும், எனது கவிதைகள் புதுப்புனல், தீராநதி, புன்னகை முதலிய இதழ்களிலும் வெளிவந்துள்ளது. பொள்ளாச்சியில் அமைந்துள்ள நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில், தமிழ் இலக்கியத்தில், தன்னுடைய இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளேன். கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே, கோவை தமிழ்ச்சங்கமும், கற்பகம் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய 1001 கவிஞர்கள் பங்கேற்ற 72 மணி நேர தொடர் கவியரங்கத்தில் எனது கவிதையைப் பாராட்டி, உலக மகா சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தற்பொழுது, பொள்ளாச்சியில் அருகேயுள்ள ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். முகவரி: முனைவர் வே. சுமதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி - 642 107 மின்னஞ்சல் : sumathi.tamilmozhi@gmail.com