அரசியலில் அடிக்கடி வரும் நெருக்கடிபோல்
=====அவ்வப்போது துன்பம் வரலாம் நம்வாழ்வில்.!
இரக்கமற்ற செயல்களைச் செயும் சழக்கரால்
=====இயல்பான வாழ்க்கையில் இடர் வந்துசேரும்.!
சிரமமின்றி சீராகநம் வாழ்க்கை செல்தற்கே
=====சித்தர்கள் சிந்தைபுக பலநல் வழிசொன்னார்.!
வரவேற்று வகையாயதை மனதில் ஏற்றினால்
=====வாழ்க்கை யெனும் போர்க்களம் இனிக்கும்.!

வாழ்வில் துன்பங்கள் நெருங்கும் போதிலே
=====வாழ்வு குறுக்கிய நல்லதங்காள்களும் உளர்.!
வாழ்வு முழுதும் துன்பமே நிறைந்த போது
=====வாழ்ந்து காட்டிய இராமர்களும் உள்ளனர்.!
வாழ்வே சூனியத்தால் சூழ்ந்த போதிலும்
=====வழிகாட்டினர் பாண்டவர்கள் நம் வாழ்வில்.!
வாழ்க்கை என்பதே ஒரு போர்க்களமதில்
=====வாழப் பழகுவதே இப்பிறவியின் நோக்கம்.!

அயலான் நம்மையாட் கொண்ட போதிலே
=====அன்று நாமடைந்த துயரத்திற்கு அளவேது.!
கயவர்கள் செயும் கலவரத்தால் சிலசமயம்
=====கால முழுதும் கலங்குகிறோம் கண்ணீரால்.!
இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது
=====இல் வாழ்விலெங்கோ இடிக்கிறது இடையூறு.!
வியர்வை சிந்தியுழைக்கும் எண்ணம் வரின்
=====வெல்லலாம் வாழ்வெனும் போர்க் களத்தை.!

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::03-06-18
நன்றி படம்:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *