மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என்ன சொல்ல வேண்டும்
என்றெண்ணி
உன்னோடு பேச விழையும் போது
சில சமயம் எனக்கு
ஓரிரு நாட்கள் கூட ஆகும் !
ஆனால் சொற்கள் வெளி வராமல்
நின்றுவிடும் நுனி நாக்கில் !
நீல நிறம் வானில் மங்கும் போது,
வேலை இருப்ப தில்லை
எனக்கு !
உனக்குச் சொல்ல புதிதாய் ஒன்றை
நினைத்துப் பார்ப்பேன் !
ஆனால் சொற்கள் வெளி வராமலே
நின்று விடும் நுனி நாக்கில் !

மக்கள் சொல்வது : ஏகாந்தனாய்
நான் இருப்பதாய் !
அது மெய்யில்லை என்று
அறிவாய் நீ !
உன் மீதுள்ள என் காதலை
உறுதிப் படுத்த
ஒரு தருணம் காத்திருக்கிறேன் !
உரைத்தவை, செய்தவை
நினைவூட்ட
விரைவில் வரும் எனக்கு அந்நேரம்.
மணப்பேன் உன்னை
திருமணத்தில் நாமிருவரும்
ஒருவராய் வாழ்வோம் !
சொற்கள் நிற்கா இனிமேல்
என் நுனி நாக்கில் !
நிற்கா சொற்கள் இனிமேல்
என் நுனி நாக்கில் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.