வண்ணத்துப் பூச்சி!

0

எஸ். நெடுஞ்செழியன்

வாழும் நாள் பதினைந்துதான்

என்றாலும் வருத்தப்படாமல் ..

வலம் வந்துகொண்டு இருக்கிறது

வண்ணக் கோலம் கொண்ட சிறகுகளோடு .

உறவாடுவதோ …

ஒருநாளில் வாடிவிடும் மலர்களோடு .

 
வாழ் நாள் … வருடக்கணக்கில் இருந்தாலும்

வருத்தம் ,வஞ்சம் ,வெறி ,ஆற்றாமை

இவைகளின் குவியல்களோடு வாழும் மனிதா …

எண்ணத்தில் வண்ணத்துப் பூச்சியை

நிறுத்தி வாழ்ந்து பார் .

வாழ்க்கை இனிக்கும் ….

வாழ்க்கை வாழ்வதற்கே …

வாழ்ந்துதான் பாரேன் !

 
அன்புடன் .செழியன்

* மகிழ்ச்சியாய் இரு ! மற்றவர்களை மகிழ்ச்சியாக்கி !!*

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *