கவிஞர் சுரேஷ்மணி கவிதைகள்

-கவிஞர் சுரேஷ்மணி

1.

படித்து முடித்துவிட்டேன்
வேலை கிடைத்துவிடும்
வேலை கிடைத்துவிடும்
என்றது மனது
கிடைத்தது
தன்மானத்தையும்
சுயமரியாதையையும் இழந்த
ஆட்டுவித்தால்
ஆடவைக்கும்
மரப்பாவை வேலை….

2.

குடும்பத்தைக் கடந்த
பணியின் சுமை
நாட்காட்டியின் வேகத்திற்கு
ஈடுகொடுக்க முடியாத
வாழ்க்கையில்
உயிர்
இலை உதிர்வதைப் போல்
உதிர்கின்றது.
தினம் தினம்..

3.

கற்களின் இடுக்குகளில்
விழுந்த விதையொன்று
வீரியத்துடன்
வளர்ந்து
கற்களை வென்றது.

4.

முதலாளித்துவத்தின் பிடியில்
படித்த பாமரர்
நாங்கள்
எதிர்த்துக்கேட்காமல்
மௌனம் காக்கும்
இக்காலத்து
மார்க்சும் லெனினும்

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *