ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 8

0

மீ. விசுவநாதன்

குருவின் மகிமை

சாரதா பீடம் தன்னில்
தரவழி குருவம் சத்தை
பாரதீ தேவி என்றே
பக்தரும் பணிவ துண்டு!
ஆயிரம் சான்று சொல்லி
அவைகளை விளக்க லாம்தான்!
தாயது அன்பை எந்தத்
தராசினால் கணக்குப் பார்க்க? (71)

ஒன்றி ரெண்டு காட்ட
உயர்வு தெரியு மென்று
இன்றி தையே இங்கு
எளிதாய் எழுது கின்றேன்!
தென்றல் காற்று தங்கத்
தேரில் வருதல் போல
தென்தி சைக்கு ஆசான்
சீட ருடனே வந்தார்! (72)

குருவும் சீடரும் தென்திசைப் பயணம்

சத்திய மங்கலம் வந்தார்
சந்திர சூரியர் போல!
நித்தியக் கடமையாம் பூஜை
நியமமும் உரையுமே செய்தார்!
சத்திய உரையினைத் தங்கள்
சன்னிதா னம்தமி ழில்தான்
சுத்தமாய்ப் பேசிய பேச்சில்
சொக்கியே போனதாம் சத்யம்! (73)

பன்மொழி வித்தகர்

பன்மொழிப் புலமை கண்டு
பாரதீ தீர்த்தர் மீது
பன்மொழிப் புலவோர் கூட்டம்,
பாமரர் கூட்ட மென்று
அன்பினால் பக்தி செய்வோர்
ஆயிரங் கோடி என்று
நன்றியால்க் கண்ணீர் மல்க
நானிலம் கூறக் கேட்டேன்! (74)

பற்றறுத் தோன்தாள் பணி

கல்லில் வடித்த சிற்பம்
கணக்கில் கல்லா னாலும்
நல்லுள் ளத்துள் தானே
ஞான ஒளியாய்த் தோன்றும்!
சொல்லி வருவ தில்லை
துறவு! சொல்லா மல்தான்
மல்லி மலரைப் போல
மனத்துள் வாசம் செய்யும் ! (75)

அமைதி வேண்டும் என்றால்
அன்பு பெருக வேண்டும்!
சுமையாம் வாழ்வு தன்னை
சுகமாய் மாற்ற வேண்டி
தமையே மறந்து கொஞ்சம்
தனது கண்கள் மூட
இமையோன் சிவனைப் போல
இருப்பார் சன்னி தானம்! (76)

தன்னைப் பணியும் பக்தன்
தரத்தைப் பார்க்கா வண்ணம்
அன்னை தரத்தில் நின்று
அருளும் உயர்ந்த வள்ளல்!
முன்னோர் சென்ற பாதை
மூத்தோர் செய்த புண்யம்
என்னைப் போன்ற வர்க்கு
எளிதாய்ச் சேர்ந்த செல்வம்! (77)

சிக்கெனப் பற்றுக பற்றுவிட

ஊரென அறிந்தேன் அல்லேன்
உறவினை அறிந்தேன் அல்லேன்
பேரெனக் கேட்கும் முன்னே
பிரியமாய் பக்தி செய்தேன்
தூரென இருந்த உள்ளம்
தூயதாய் ஆவ தற்கு
பாரதீ தீர்த்தர் பாதம்
பணிவதே என்று ணர்ந்தேன் ! (78)

எதிலும் ஒழுங்கு

திருநீற்றில் நேர்த்தி; ஆடை
திருமேனி கொள்ளல் நேர்த்தி;
வரும்வார்த்தை எல்லாம் நேர்த்தி;
வண்ணப்பூ வெடுத்து ஈசன்
உருமீது மெல்ல வைத்துப்
பூஜைசெய்யும் நேர்த்தி என்று
தருணமெலாம் நேர்த்தி யான
தவசியேஸ்ரீ சன்னி தானம்! (79)

அன்பே சிவம்

மானிடம் அன்பு காட்டி
மயிலிடம் பரிவு கூட்டி
தேனிபோல் நல்ல தெல்லாம்
தேடியே தினமும் சேர்த்து
மானிடப் பண்பு ஓங்க
மறைவழி வாழும் யோகி
தானினை வென்ற சான்றோர்
பாரதீ தீர்த்தர் என்பேன். (80)

(யாத்திரை தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *