போன வருஷம் போட்ட சட்டை கொஞ்சம் கூடக் கிழியவில்லை
ஒரு முறைதான் காலணியைத் தைத்தேன்
பழைய பகை ஒன்றைச் சரி செய்தேன்
புதிதாய் இரண்டு கிளம்பிவிட்டது
வெற்று முகம் என்றாலும் கொஞ்சம் சிரிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன்
உரத்துப் பேசினால் எனக்கே தலை வலிக்கிறது
பிச்சை கேட்பவனிடம் போதனை சொல்வதில்லை .
இரண்டு முறை சோப்பு மாற்றியாகிவிட்டது
கவிதை முனைப்பு திருகுவலி
கடன் சுமை கொஞ்சம் பரவாயில்லை
போன வருடம் புரியவில்லை
இந்த வருடம் ஒன்னுமே புரியவில்லை
முன்பு கோபம் உடனே வரும்
இப்போது மெல்ல வருகிறது.
நான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது .
வயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி .
சொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .