வாழ்க்கை எப்படிப் போகிறது?

0

சேஷாத்ரி பாஸ்கர்

போன வருஷம் போட்ட சட்டை கொஞ்சம் கூடக் கிழியவில்லை
ஒரு முறைதான் காலணியைத் தைத்தேன்
பழைய பகை ஒன்றைச் சரி செய்தேன்
புதிதாய் இரண்டு கிளம்பிவிட்டது
வெற்று முகம் என்றாலும் கொஞ்சம் சிரிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன்
உரத்துப் பேசினால் எனக்கே தலை வலிக்கிறது
பிச்சை கேட்பவனிடம் போதனை சொல்வதில்லை .
இரண்டு முறை சோப்பு மாற்றியாகிவிட்டது
கவிதை முனைப்பு திருகுவலி
கடன் சுமை கொஞ்சம் பரவாயில்லை
போன வருடம் புரியவில்லை
இந்த வருடம் ஒன்னுமே புரியவில்லை
முன்பு கோபம் உடனே வரும்
இப்போது மெல்ல வருகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *