விசாலம்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                முன்பு ஒரு தடவை எனக்கு குடகு நாட்டின் முக்கிய இடமான “மடிக்கேரி” யில் ஒரு மாதம் தங்க வாய்ப்பு கிடைத்தது நான் தங்கியிருந்த  இடத்தின் தலைவி எனக்கு நல்ல தோழியானாள். அவளது நாட்டு கலாச்சாரம் ,பண்டிகைகள் எல்லாவற்றையும் பற்றி நான் கேட்க என்னிடம் பகிர்ந்து கொண்டாள். அதில் தசராவும் ஒன்று. மைசூர் தசரா உலகப்புகழ் பெற்றது.அது நடக்கும் நேரம் காலையிலிருந்து தொடங்கி பிற்பகல் வரை நிகழும்.ஆனால் மடிக்கேரி தசரா இரவில் தான் ஆரம்பிக்கும் .இரவு முழுவதும் நடக்கும் பலர் காலையில் மைசூர் தசராவைக் கண்டுக்களித்து பின் இரவில் மடிக்கேரிக்கு வந்து விடுவார்கள்.அங்கு அம்மன் கோயில் பல உள்ளன.அதில் முக்கியமான சவுத்தி மாரியம்மன், கோட்டை மாரியம்மன்,காஞ்சி காமாட்சியம்மன் தட்சிணமாரியம்மன். காவிரியம்மன் போன்ற கோயில்களில் தசரா மிகவும் பிரமாதமாக கொண்டாடப்படுகிறது இத்தனை அம்மன் கோயில்களைப்பிரதிஷ்டை செய்த தினம் நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமி. இவைகளைப்பிரதிஷ்டை செய்த காரணம் என்ன ?

முன்பு குடகு நாட்டை சிக்கவீரராஜேந்திரா என்ற மன்னர் ஆண்டு வந்தார்.சில காலமாக அவர் முகத்தில் கவலை ரேகை அப்பிக்கொள்ள நிம்மதி இழந்து தவித்தார். காரணம் என்னவென்றால் மடிக்கேரி மக்களை கடும் வியாதி பீடித்து இதனால் பலர் மிகவும் கஷ்டப்பட்டனர். இதனால் வைத்தியச்சிலவு செய்து பணமும் குறைந்து போயிற்று. எல்லோர் வீட்டிலும் வறுமை தாண்டவமாடியது. மக்கள் நலனின் மிகவும் அக்கரை கொண்ட மன்னன் மிகவும் வருந்தினார். பின் பல தடவை யோசித்து ஒரு நல்ல ஜோசியரை வரவழைத்து  விவரங்களைச்சொல்லி இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்டார்.

“மடிக்கேரி மக்களுக்கு மனதில் பயம் கவ்விக்கொண்டிருக்கிறது .அவர்களுக்கு மனதில் தைரியம் ஊட்ட இங்கு தேவியின் கோயில் இல்லை இதனால் சக்தி வாய்ந்த தெய்வங்களை இங்கு உடனே பிரதிஷ்டை செய்ய வேண்டும்” என்றார். மன்னரும் இதற்கு ஆக்ஞை பிறப்பித்தார் இதனால் கோட்டை மாரியம்மன் .காமாட்சியம்மன், என்று பல அம்மன்கள் வந்து அமர்ந்து அருளைப்பொழிந்தனர்.உடனடியாக நோய் அகன்றது. இதனால் வறுமையும் ஒழிந்தது இந்த நிகழ்வை மனதில் கொண்டு தசரா தினத்தை விழாவாக எடுத்து மிகசிற்ப்பாக நடத்துகின்றனர். மடிக்கேரியில் ஸ்ரீராம மந்திரா, கோட்டை மகாகணபதி, பேச்சுரு ராமசந்திரா சவுடேஸ்வரி .சரவாளே பகவதி, அனுமான் கோயில் போன்ற மேலும் சில கோயில்கள் இதனிடையே கட்டப்பட்டன.                                                                                                                                                                                                                                                                                                                                                                                   தசரா தினத்தன்று ஊர்வலம் சவுத்தி மாரியம்மன் கோயிலிருந்து புறப்படும்.நேராக கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு வரும் .அங்கு அந்த அம்மனும் பவனி வர ரெடியாக அலங்கார பூஷிதையாக அமர்ந்திருப்பாள்.பின் காஞ்சி காமாட்சியம்மன்  அவர்களுடன் சேர்ந்து கொள்வாள்.  தண்டு மாரியம்மன்  இவர்கள்  வரவை ஆவலாகப் பார்த்தபடி  காத்திருக்க  அவளும் ஊர்வலத்தில் கலந்து கொள்வாள் இத்துடன் மேலும் ஆறு கோயில்களிலிருந்து தெய்வங்கள் அவர்களுடன் சேர்ந்துகொள்ள இரவு முழுதும் விடிய விடிய ஊர் முழுவதும் ஊர்வலம் வருகின்றன. சில இடங்களில் நடுநடுவே  ஊர்வலம் நிற்கும் .நிற்கும் அவ்விடத்தில் விதவிதமான   செயறகை மண்டபங்கள் கட்டப்பட்டு பலவித விளக்குகளால் சுவர்க்கபூமி போல் இருக்கும். மண்டபங்களில் எது சிறந்து அழகாக விளங்குகிறதோ அதற்கு பரிசும் உண்டு. வழி முழுவதும் பலவிதமான நடனங்கள். ஆட்டங்கள், தாரை,தம்பட்டையுடன் முழங்க பல தேவிகள் உர்வலம் வருகின்றனர்.ஒவ்வொரு மண்டபத்தின் முன்னும் ஊர்வலம் நின்று அங்கு ஆராதனை நடக்கிறது.ஒவ்வொரு அம்மனுக்கும் அலங்கரித்த தேர்  ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அதே போல்அதற்கென்று தயாரிக்கப்படும் மண் பொம்மையும் அழகான அம்மன் உரு பெற்று தகுந்த வாகனம் மேல் அமர்ந்து   பவனி வருகிறது .இதற்கென்றே பல வழிநடை கடைகள் புதிதாக அமைக்கப்பெற்று வியாபாரம் சக்கைப்போடு போடுகிறது. தவிர ராட்டினம் கண்காட்சிகள் .என பல கேளிக்கைகளும் உண்டு. மக்கள்  இதை மிகவும் ஆனந்தமாக  செய்வதால் மடிக்கேரி தசராவும்  மிக அமர்க்களமாக நடக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *