கனம் கோர்ட்டார் அவர்களே!   – 30

அவிழும் முடிச்சு

இன்னம்பூரான்
18 11 2016

 

innam

நீதிதேவதை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது சென்னை உச்சநீதிமன்றத்தின் கிளை மதுரையில் ஜூலை 24, 2005 அன்று துவக்கப்பட்டது. அந்த விழாவுக்குத் தலைமை வகித்த சென்னை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆற்றிய உரையில், ஒரு தென்றல் வீசியது என்கிறார், ஒரு பிரபல மூத்த வழக்கறிஞர். அவருடைய மைந்தன் உச்சநீதி மன்றத்தில் நீதிபதி என்றால்,பார்த்துக்கொள்ளுங்கள், பெரியவரின் பெருமையை.

தென்றல்: மக்களின் மேலாண்மைதான் குடியரசின் இலக்கணம். நீதிபதிகள், பிரதிநிதிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எல்லாருமே மக்களின் ஊழியர்கள்; அதற்கு அவர்கள் பெருமிதம் கொள்ளவேண்டும். அத்துடன் நிற்காமல் வீசிய தென்றல், அந்த ஆளுமை படைத்த மக்கள் ஊழியர்கள்மீது, அவர்களின் பணியின் குறைவுகளின்மீது குற்றம் காணலாம். நமது அதிகாரமே மக்களின் நம்பிக்கையின்மீது தான் செழிக்கிறது; அவதூறு வழக்குத் தொடரும் சக்தியின்மீது அல்ல.

பேச்சுரிமையும், கருத்துரிமையும் நமது அரசியல் சாஸனம் அளித்த வரன்கள். அதற்கு விலக்காக அமையும் இந்த கோர்ட்டாரின் அவதூறு சட்டம் ஏற்புடையது அல்ல. ஒரு ஜட்ஜ் லஞ்சம் வாங்கி விட்டாரென்று கற்பனை செய்து கொள்வோம். அந்த உண்மையை எடுத்துரைப்பது அவதூறு என்று கோர்ட்டார் அந்த உண்மை விளம்பியைத் தண்டிப்பது அபத்தம் இல்லையோ! மேலும் ஒரு அபத்தம். நமது அரசியல் சாஸனத்தின் ஷரத்து 124 (4) நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை செய்த ஜட்ஜை நீக்க வழிசெய்கிறது. அதைச் செயல்படுத்த விரும்புபவர் முதலில் அதே ஜட்ஜால் ஜெயிலுக்கு அனுப்பப்படலாம்! இந்த அபத்தத்தைத் தவிர்க்க வழி இல்லையா? உளது. நீதித்துறையே இந்தக் குறையை நீக்கவேண்டும். அவர்கள் சுணங்கினால், வேறு வழியின்றி நாடாளுமன்றமே அதை நீக்கவேண்டும். அவையில் ஊசி விழும் சத்தம்கூட கேட்காத மெளனம். எத்தனை முகங்கள் இறுகியவையோ? சொன்னால் பொல்லாப்பு. பத்துவருடம் கழிந்த நிலையிலும் நான் மாட்டிக்கொள்ளலாம். ஜெயிலுக்குப் போற வயதா? திகார்லெ பிஸ்கெட் ராஜன் பிள்ளையை சாவடிக்கல்லை?

[Pillai’s widow, Nina Pillai, alleged that a conspiracy was behind the death of her husband in the jail. She urged the court to direct a CBI probe on the conspiracy angle as she feared foul play in the death of her husband. The Chief Metropolitan Magistrate (CMM) had ordered a CBI inquiry based on the petition.[9] The medical officer who conducted the autopsy, deposed before the CMM, and said that Pillai had died of asphyxia caused by blocking of blood in the respiratory system.The Justice Leila Seth Commission under Leila Seth was constituted to enquire into the conspiracy angle of his custodial death, but did not find any conclusive evidence. The Commission had issued advertisements in the newspapers seeking public help in the matter. Nina Pillai said she would provide evidence about the conspiracy angle, but later she refused to name the conspirator. The Commission concluded that ‘ways and means must be found to ensure that competent doctors were posted in the jail’. The Commission also suggested that the UN standard minimum rules be followed, and a prisoner should be allowed to be treated by his own doctor. Following the submission of its report, there were systemic changes at the Tihar jail, with a 24-hour attendance by doctors. There were 75 doctors on call compared to the previous 16, and initial medical check up was made imperative~ Wikipaedia] எனினும்?!

அந்தப் பிரபல வழக்கறிஞர், ‘என்னுடைய 55 வருட சட்டம் சார்ந்த துறையில் பெற்ற அனுபவத்தில், இம்மாதிரி ஒரு நீதிபதியே தன் மனத்துள் புகுந்தாரய்ந்து பொருத்தமான வழிமுறையை முன்னுரைப்பதை முதலில் காண்கிறேன் என்று புளகாங்கிதம் கொள்கிறார்.

அந்தத் தலைமை நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்.

அந்தப் பிரபல வழக்கறிஞர்: ஃபாலி. எஸ்.நாரிமன் அவர்கள்.

காலத்தின் கோலமடா! இன்று இந்தியாவின் உச்சமன்றத்தில் ஒரு தாவா.

கோர்ட்டாரை அவமதித்தாகக் குற்றம் சுட்டப்பட்டவர்: அந்த மாஜி தலைமை நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்.

அவருக்காக வாதாடப்போகும் வழக்கறிஞர்:அந்த பிரபல வழக்கறிஞர்: ஃபாலி.எஸ்.நாரிமன்.

[தொடரும்]

*****

சித்திரத்துக்கு நன்றி:

http://ai-i1.infcdn.net/icons_siandroid/png/200/8466/8466765.png

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *