மனிதா, வாழ்க்கையை சுமையானதாய் எண்ணிவிடாதே

சுகங்களும் தேடி வரும் என்பதை நீ மறந்துவிடாதே

குடும்பத்தலைவனுக்கோ என்றும் வாழ்வில் சுமைதான்

சுமைகளையும், சுகங்களாக கருதுபவனே சிறந்தவன் !

நெஞ்சினில் உரம் கொண்டு சுமைகளை தாங்கிடுவாய்

சுகமான சுமைகளும் உண்டு என்பதை அறிந்திடுவாய்

மயிலிறகு அதிகமாய் ஏற்றினாலும், அச்சு முறியும் ,

மனதில் சுமைகள் அதிகமானாலும் மனம் இறுகும் !

வீட்டிற்கு முதல்வனே என்றும் ஓர் சுமைதாங்கி

எல்லா இன்ப, துன்பங்களுக்கும் அவன் ஒரு இடிதாங்கி,

எல்லாவற்றையும், பொறுமையோடு எதிர் கொள்ளவேண்டும்

எத்துயர் வரினும் எதிர்த்து திறம்பட செயலாற்ற வேண்டும் !

மனித வாழ்க்கையில் காதலும் சுகமாய் பூக்குதே

அதுவே சிற்சில சமயத்தில் சுமையாய் தாக்குதே

சுமைகளும், சுகமும் கலந்ததே மானிட வாழ்க்கை

இதனை அறியாமல் ஏன் மாற்றுகிறாய் உன் போக்கை !

ரா.பார்த்தசாரதி

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *