சத்தியமணி

 

குழலூதக் கலைகற்று கொடுப்பான் – கோதை
குழலாடும் பின்னேகி ஊதிக் கெடுப்பான்
பழகாத வித்தையோ காதல் – மாயன்
அழகாக விளையாடி போதைக் குடிப்பான்
தேமொழி தமிழ்பாடக் கேட்பான் – பாவைத்
தேனாழி அலையாட நீச்சல் அடிப்பான்
தூரிகை வண்ணம் எடுப்பான் – அதைப்
பேரிகை முழங்க‌ ஓவியம் களிப்பான்
வெல்லமை யீட்டிடும் வித்தன் – எடுத்து
சொல்லமைத் தாடிடும் சித்தன்
வல்லமைத் தருகின்ற வரதன் – விசயன்
வில்லமைக் கும் கண்ணன் வாழி!வாழி!

(குறிப்பு- தேமொழியின் வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 வர்ணிக்கும் கண்ணனின் பாட்டு)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.