செண்பக ஜெகதீசன்peacock-images

ஓட மதவிலே

ஒத்தயில காத்திருக்கும் கொக்கே கொக்கே- நானும்

அத்தமவன் வருவானுண்ணு

ஒத்தக்காலுல நிக்கேன் நிக்கேன்..

 

வாடக்காத்துல

ஓடக்கரயில

ஆடக் காத்திருக்கும் மயிலே மயிலே

பாடாப்படுத்துறானே பாவிமவன்,

தேடவெச்சிட்டானே- அப்பன்

கூடப்பொறந்தவா பெத்தபுள்ள..

 

அரிசிபோட்டா

அருகவரும் மைனா மைனா

உருகிப்போயி நிக்கிறனே,

தெருவிலபோன மச்சானத்தான்

தேடிப்பாத்து வரச்சொல்லு- நான்

வாடுறதப் போய்ச்சொல்லு..

 

சொல்லச்சொல்லத்

திருப்பிச்சொல்லும் கிளியே கிளியே

பாலும்பழமும் ஒனக்குத்தந்தேன்- எம்

மேலக்கொஞ்சம் எரக்கம்காட்டு,

வேலதேடிப் போனமச்சான்

வெபரந்தெரிஞ்சி எனக்குச்சொல்லு- என்

வேதனயக் கொறச்சித்தள்ளு..

 

துள்ளிஓடும் கண்ணுக்குட்டி

மொள்ளவாயேன் கிட்டகொஞ்சம்,

எள்ளளவும் பயமில்லாமத்

துள்ளுறியே- நானும்

எம்மச்சான் பேரச்சொல்லி

ஏங்குறனே..

 

சோறுபோட்டா

சேந்துவரும் காக்கா காக்கா

சேதிஒண்ணு தெரிஞ்சிக்கிட்டேன்,

காலயில ஒங்கொரலக்

கேட்டுப்புட்டேன்-

கட்டாயம் வந்துடுவான்

எம்மச்சான்,

கறியுஞ்சோறும் ஒனக்குத்தான்

கட்டாயம் நாந்தருவேன் காக்கா காக்கா…!

படத்துக்கு நன்றி

    http://fengshui.about.com/od/fengshuicures/qt/feng-shui-birds.htm            

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.