சிதாரில் விளையாடிய விரல்கள்
அந்தக்காலத்தில் வந்த அனுராதா என்ற ஹிந்தி சினிமாவும் அதற்கு இசை அமைப்பாளராக இருந்து முத்துக்களொப்ப பாடல்களை நமக்கு அளித்த சிதார் மேதை பண்டிட் ரவிசங்கரை எப்படி மறக்க முடியும்?கதாநாயகியாக லீலாநாயிடு நடிக்க திருமதி ஆஷா போஸ்லே பாட அந்தப்படத்தில் வந்த எல்லா பாடல்களுமே ஹிட் ஆயின “ஜானே கைஸே ஸ்பனேமே கோகயே அக்கியான் “”பியா ஜானென ” என்ற பாடலும் இன்றும் பசுமையாக இருக்கிறது .
நல்ல தீர்க்கமான நாசி, அகண்ட நெற்றி நல்ல சிவப்பு பெரிய காதுகளுடன் சுந்தரபுருஷராக இருந்த பண்டிட் ரவிசங்கர் தான் கற்றுக்கொண்ட சிதாரில் தான் என்னென்ன ஸ்வரங்கள் பேச வைத்தார் ! எல்லா ஸ்வரங்களும் இனிய லயத்துடன் அப்படியே தென்றலில் கலந்து நம்மிடம் வந்து சேரும் போது அவை அப்படியே நம் இதயங்களைத்தொட்டன .ஒரு மீட்டிலிலேயே பல ஸ்வரங்கள் இழைந்து வெளிப்படும் அவர் வாசிக்கும் “யமன் ” என்ற நம் கல்யாணி ராகம் .பெஹாக் சிந்து பைரவி . தேஷ் எல்லாமே நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம் .தவிர அவர் நல்ல நடன கலைஞர் நாட்டிய கோரியோகிராபர் ,தேர்ந்த ஆசிரியர் .நாட்டுப்பாடல்கள் மேனாட்டு இசை . கர்நாடக இசை சினிமா இசை ,மெல்லிசைப்பாடல்கள் என்று பல கிளைகளில் புகழ்ப்பெற்று பாரத ரத்னா என்ற பட்டத்தையும் பெறறவர்.எப்போதுமே ஒருவர் கலைக்குடும்பத்தில் பிறக்க அவர் பெரிய மேதையாக வளர அவர் வீட்டுச்சூழ்நிலையும் மிகவும் உதவுகிறது என்பதை இவர் குடும்ப மூலமாகவும் தெரிய வருகிறது .பெங்காலி பிராமணக்குடும்பத்தில் இவர் பிறந்தார் . இவரது சகோதரர் திரு உதயசங்கர் சிறந்த நடனகலைஞர் பண்டிட் ரவிசங்கர் தன்னுடைய பத்தாவது வயதிலேயே தன் சகோதரரின் நாடகக்குழுவிலும் பங்குப்பெற்று அத்துடன் தில்ரூபா .சிதார் என்ற பல வாத்தியங்களையும் தன் முயற்சியாலேயே வாசிக்க ஆரம்பித்து விட்டார். பாபா அல்லாவுத்தீன் கான் இவருக்கு சிதார் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.அவர் மல்ஹார் கரானாவைச்சேர்ந்தவர் ஆனால் அப்போது ரவிசங்கர் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பாரிஸ் நகரின் நாகரீகம் எல்லாம் மனதுக்குப்பிடிக்காமல் தன் கிராமத்திற்கு திரும்பவும் வந்துவிட்டார். இதனால் அவரது சகோதரருக்குக்கோபம் ஏற்பட்டும் இவர் கவலைப்படவில்லை நேராக சிதார் கற்றுக்கொள்ள குரு இருந்த கிராமத்திற்குச்சென்று குருகுலம் ஏற்று சிதார் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் கடும் பயிற்சி ஆரம்பமானது ஒரு நாளுக்கு பதினெட்டு மணி நேரம் பயிற்சி பின் குருவின் மகள் அன்னபூர்ணாதேவியைத் திருமணம் செய்துக்கொண்டார் ஆனால் அபிமான் படம்
போல் இவருடைய வாழ்க்கை இருந்திருக்கும் என நினைக்கிறேன் இவரது மனைவி இவரைவிட இசையில் மிஞ்சுபவளாக இருந்ததால் அங்கு இவருக்கு ஒரு “காம்ப்ளெக்ஸ் ” ஏற்பட்டு மனைவியுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்தும் ஆனது
நான் இவரை இரண்டு முறை நேரில் பார்த்து பேசி இருக்கிறேன் என் சகோதரர் திரு வெங்கட் திரு ரவிசங்கர் ஜியின் சிஷ்யரிடம்
சிதார் படித்தார் அப்போது ஒரு முறை இவரை நேரில் காண போனபோது நானும் போயிருந்தேன் தன்னுடைய சிதாரில் மால்கோஸ் ராகம் வாசித்து எங்களை ஆனந்தப்படுத்தினார் .இவரது வாத்யவிருந்தம் என்றவாத்ய குழுவின் இசை தில்லி ரேடியோவில் தவறாமல் வந்துக்கொண்டிருந்தது . கேட்க மனரஞ்சகமாக இருக்கும் .இவர் பல நாடுகளுக்குப்போயிருந்தாலும் முழு இந்தியனாகவே இருந்திருக்கிறார் .அதே போல் இவரது இசையும் இந்திய இசையாகவே இருந்திருக்கிறது இந்திய இசையை
வெளி நாடுகளில் பரப்பிய பெருமை இவரையே சேரும் இவரது இசைக்குழுவில் மிருதங்கம் ,தபலா கஞ்சிரா ,மோர்சிங் கடம் போன்ற எல்லா தாள வாத்தியங்களும் சேர்ந்து அழகான போட்டியுடன் தனித்தனியாகவும் பின் கடைசியில் சேர்ந்தும் ரிதம் கொடுக்க நாம் நம்மையே மறந்துவிடுவோம் நாட்டுப்பாடல் என்றால் அதற்கேற்ப வாத்தியங்கள் டோல் ,உடுக்கு போன்றவைகளும் சேரும்
அமெரிக்காவில் பலதடவைகள் நம் நாட்டு இசையைப்பற்றி சொற்பொழிவு ஆற்றி பல அமெரிக்கர்களைக்கவர்ந்து இதனால் பல வெளிநாட்டவர்கள் நம் நாட்டு சங்கீதத்தைக்கற்றுக்கொள்ளவும் அனுபவிக்கவும் ஆரம்பித்தனர் இவருடன் இசையில் சம்பந்தப்பட்டவர்கள் பீட;ல்ஸ் ஜுபின் மேஹ்தா, யஹூதிமெஹினின் ,ஜீன்பியர் லூயிஸ் ராம்பல் போன்ற மேற்கத்து இசை மேதைகள் இவர் கச்சேரி செய்யும் போது கேட்க வந்திருக்கும் ரசிகர்களிடம் தான் வாசிக்கப்போகும் பாட்டைப்பற்றி அதன் ராகம் தாளம் எல்லாம் விவரமாக எடுத்துரைத்து பின் வாசிப்பார் .இதனால் இசை புரியாதவர்களும் தலை ஆட்டி நன்கு அனுபவிப்பார்கள் இசைத்தெரிந்தவர்கள் தன்னையே மறந்து அதில் லயித்துவிடுவார்கள் .இந்தியாவின் ஐம்பதாவது ஆண்டு சுதந்திர தினம் போது நியூயார்கில் ஒரு பெரிய புகழ் பெற்ற ஹாலில் இவர் ” ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா “என்ற பாடலை வாசித்து இந்தியாவுக்குப்பெருமை சேர்த்தார்.
இவர் கர்நாடக இசை படிக்க காரணமாயிருந்தது வீணை தனம்மா அவர்களின் குடும்பம் இதனால் சாருகேசி ராகமும் வாசஸ்பதி ராகமும் வட இந்தியாவில் இவர் மூலம் பிரபலமாயிற்று வெளிநாடுகளிலும் மிகவும் புகழ் பெற்ற யஹுதிமெனுஹின் , ஜீன் பியேர், லூயிஸ் ராம்பல் ,போன்றவர்களுடன் சேர்ந்து அவரது இசை இருந்தாலும் கொஞ்சமும் மேல்நாட்டு இசையைக்கலக்காமல் இந்திய இசையையே பிரதானமாகக்கொண்டு வாசித்ததாக இவர் அளித்த பேட்டி மூலம் தெரிய வருகிறது .
இவரது இசை இத்தனை புகழ் இவருக்குத் தந்திருந்தும் மணவாழ்க்கை இவருக்கு நிம்மதியைத்தரவில்லை என்றும் அதனால்
மனம் ஒடிந்து தற்கொலை எண்ணமும் வந்தது என்றும் ஆனால் கடைசி காலத்தில் சுகன்யா என்பவளை மணந்தப்பின் நிம்மதி கிடைத்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் முதல் மனைவிக்குப்பின் இவரது குருவும் இவரை விட்டு விலகிக் கொண்டாராம்
பின் ஒரு நடனக்கலைஞர் கமலா சாஸ்த்ரி என்பவரை மணந்துக்கொண்டார் .பின் நோரோஜோன்ஸ் என்பவருடன் தொடர்ப்பு ஏற்பட்டு ஸுஜோன்ஸ் என்ற பெண்குழந்தைக்குத்தந்தை ஆனார் .பின் கடைசியில் இவர் மணந்த சுகன்யாவுக்கு அனுஷ்கா சங்கர் என்ற பெண் பிறந்து அவளும் இசையில் பல அவார்டு வாங்கி இருக்கிறாள். ஸுஜோன்ஸும் இசையில் பல கிரானி அவார்டுகள் பெற்றிருக்கிறாள். “என் மனம் ஒருநிலையில் இல்லாமல் நான் என் வாழ்க்கையில் பல வருடங்கள் சஞ்சலத்திலேயே இருந்து நல்வாழ்க்கையைத்தவற விட்டேனோ என்று எனக்குத்தோன்றுகிறது” என்று அவர் முன்பு பேட்டியும் அளித்திருக்கிறார் .
ஏசியன் கேம்ஸ் 1982ல் இவர் தயாரித்த ஸ்வாகதம் சுஸ்வாகதம் என்ற பாடல் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது
இவர் வாசிக்கும் “துன்” என்ற நாட்டுப்பாடல்களில் ஆடுமேய்ப்பவன் வருவான் படகோட்டியும் வருவான் . விவசாயியும் வருவான்
நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்த இசைக்கலவையில் லயித்துவிடுவோம் . ரிச்சன் அட்டின் பரோ தயாரித்த மஹாத்மா காந்தியில் வரும் இவரது வரும் இசை ஆஸ்கர் பரிசுக்குத்தேந்தெடுக்கப்பட்டது என்பது இந்தியாவுக்கே மிகவும் பெருமை அளிக்கும் விஷயம் தான்.. இந்த இசையில் பெரிய இசைக்கலைஞர் ஸுபென் மேஹ்தாவும் கூட இருந்தார்
இத்தனைப்புகழ்ப் பெற்ற .இசை மேதை பாரதரத்னா பண்டிட் ரவிசங்கர்ஜி இன்று நம்மிடம் இல்லாதது இசையுலகத்தில் ஒரு பெரிய இழப்பேயாகும் . அவரது மகன் இவரைப்போல் மேலே வந்துவிடுவார் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
படத்துக்கு நன்றி
http://post.jagran.com/legendary-musician-pandit-ravi-shankar-passes-away-1355285097