தண்ணீரில் தத்தளிக்கும் மேற்குத் தாம்பரம்

அண்ணாகண்ணன்
நாங்கள் வசிக்கும் சென்னை, மேற்குத் தாம்பரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளே தெரியாத அளவு தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதோ ஒரு நேரடிக் காட்சித் தொகுப்பு.
Alert: தாம்பரத்தில் வெள்ளம் ஏறுகிறது
சென்னை, மேற்குத் தாம்பரத்தில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி, அதன் நீர்மட்டம் ஏறுகிறது. வீடுகளிலிருந்து சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு, தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் பெயர்ந்து வருகிறார்கள். தண்ணீர் வடியும் என்று பலரும் காத்திருக்கிறார்கள். களத்திலிருந்து நேரடிக் காட்சிகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)