திருவெம்பாவை – 10 | பாதாளம் ஏழினும்
![](https://www.vallamai.com/wp-content/uploads/2020/12/Shiva_as_the_Lord_of_Dance_LACMA_edit-797x1024.jpg)
திருவெம்பாவை – 10
மாணிக்கவாசகர்
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்.
இறைவனுக்கு உருவம் கொடுத்தாலும் அது ஓர் அடையாளமே. அதுவே முழுமையான உருவம் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் அவனை எப்படி ஓர் எல்லைக்குள் சுருக்க முடியும்? அதனால்தான் மாணிக்கவாசகர், சிவபெருமானை ஓத உலவா ஒருதோழன் என்கிறார். அவன் ஊர் எது? பேர் எது? உற்றார் யார்? அயலார் யார்? இத்தகையவனை எவ்வாறு பாடுவது? எனக் கேட்கிறார். தன் திருமேனியில் பேதை ஒருபால் கொண்ட தோழனை டெக்சாஸிலிருந்து ஸ்ருதி நடராஜன் உளமாரப் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.
படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா
https://en.wikipedia.org/wiki/Shiva#/media/File:Shiva_as_the_Lord_of_Dance_LACMA_edit.jpg
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)