மக்கள் தொலைக்காட்சியில் அண்ணாகண்ணன்

0
Annakannan in Makkal TV

2021ஆம் ஆண்டு எழுத்துத் துறை எப்படி இருக்க வேண்டும் என்று மக்கள் தொலைக்காட்சியிலிருந்து கேட்டார்கள். எங்கள் வீட்டுக்கே வந்து என் கருத்துகளைப் பதிந்தார்கள். அவர்களும் இவர்களும் என்ற இந்த நிகழ்ச்சியில், அச்சு எழுத்தாளர்கள், இணைய எழுத்தாளர்கள் சார்பில் கருத்துகளைப் பெற்றார்கள். என்னுடன் எழுத்தாளர்கள் வையவன், கே.பாரதி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். 01.01.2021 புத்தாண்டு அன்று காலையில் இந்த நிகழ்ச்சி, ஒளிப்பானது.

என் கருத்துரையில், எழுத்துத் துறை, பத்திரிகைத் துறை, பதிப்புத் துறை, தமிழ் வளர்ச்சி ஆகியவை 2021இல் எப்படி இருக்க வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொண்டேன். என் கருத்துரை இங்கே. இதைப் பார்த்து, உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

 

நன்றி – மக்கள் தொலைக்காட்சி

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.