கோவையில் நான் கண்ட வண்ணத்துப்பூச்சி, இது. கல்லிலும் மண்ணிலும் அமர்ந்தபடி இருந்தது. அரை மணிநேரம்போல் இதைப் பின்தொடர்ந்து படமெடுத்துக்கொண்டிருந்தேன். அதைத் தொந்தரவு செய்கிறேன் என எண்ணியதோ என்னவோ, நேராக என் கண்களைக் குறிவைத்து, தாக்குவது போல் நெருங்கி வந்தது. கண்களுக்கு முன் செல்பேசி இருந்ததால் தப்பித்தேன்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.