பாமரன் பார்வையில் பாரதி – நூல் வெளியீட்டு விழா

அன்பர்களே!

வணக்கம்.

முதன்முதலாக நான் பாரதியைப் பற்றி எழுதிய நூல் “பாமரன் பார்வையில் பாரதி.” இதை ‘தினமலர்’ நாளிதழைச் சேர்ந்த தாமரை நிறுவனம் வெளியிடுவதும், அது பாரதியின் நினைவு நூற்றாண்டில் வெளியாவதும் சிறப்பு.

நண்பர்கள் சேவாலயா முரளியும், ராமகிருஷ்ணனின் மதுரத்வனியும் இணைந்து வழங்கும் ‘மாதம் தோறும் மகாகவி’ சொற்பொழிவுத் தொடருக்காக நான் எழுதிய குறிப்புகளே இந்த நூலுக்கு மூல காரணம்.

இந்த நூலுக்கு தமிழறிஞர் திரு. ம.வே.பசுபதி ஐயா அவர்கள் ஆசியுரை வழங்கியிருப்பது எனக்குப் பெரும் பெருமை.

செப்டம்பர் 8 புதன் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை மயிலாப்பூரில், லஸ் கார்னர் அருகிலுள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில், நூலை வெளியிடுபவர் என் நலம் விரும்பியும், புலவரும், சிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமான திருச்சி புலவர் திரு. இரா. இராமமூர்த்தி ஐயா அவர்கள்.

 

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து என்னுடைய ‘மாதம் தோறும் மகாகவி’ சொற்பொழிவு நடைபெறும்.

YouTube

அரங்கில் உங்களைச் சந்திக்க அன்புடன் அழைக்கிறேன்!

அன்புடன்,
ரமணன்

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *