பொங்கல் அன்று தாம்பரத்தில் இந்தச் சாய்பாபா ரதத்தைப் பார்த்தேன். ரதம் முழுக்க ஷிர்டி சாய்பாபா படங்களும் சிலைகளும் இருந்தன. கூடவே திருமால், இலட்சுமி, விநாயகர்… என இந்து தெய்வங்களின் படங்களும் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் இந்த ரதத்துக்குச் சிறிய காணிக்கைகள் கிடைத்தவண்ணம் இருந்தன. இந்த ரதத்தை இயக்குபவருக்கு இதுவே முழு நேரத் தொழில். அவருடன் ஒரு சிறிய உரையாடலும் இந்தப் பதிவில் உள்ளது.

ரதத்துடன் ஒலித்த இந்திப் பாடலுக்குக் காப்புரிமை இருப்பதால், ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரை வேண்டினேன். சாயி பக்தரான அவர், உடனே ஒரு பாடலை இயற்றி இசையமைத்துப் பாடிக் கொடுத்துவிட்டார். இதைக் கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *