திருப்பூவணப் புராணம் – பகுதி – (11)

0

கி.காளைராசன்

முதலாவது

சூரியன் பூசனைச்சருக்கம்

 

231      ஓசைகொளித்தலத்துலகியாவையும்

வீசியகனையிருள்விழுங்குகின்றவான்

றேசுடைத்தினகரன்சிவலிங்கந்தனைப்

பூசனைபுரிந்ததுபுகலுவாமரோ

 

232      பன்னருமாதவம்படிவமாகியே

மன்னியசவுநகமகிழ்ந்துகேண்மியா

வென்னலுமன்னவனியம்பருந்தவந்

துன்னுநற்சூதனைத்துதித்தன்மேயினான்

 

233      உன்றனக்கிணையிலையுலகமூன்றினு

முன்றனக்கிணையிலையுரைக்குங்காலையி

லுன்றனக்கிணையுனையுரைக்குமாதலா

லுன்றனக்கொன்றுளதுரைசெய்வாமரோ

 

234      அங்கண்வானகத்திருளகற்றுமாரழற்

பொங்குவெங்கதிரவன்பூசையாற்றவே

சங்கரன்விரும்பியேதானிலிங்கமா

வங்கவணடைந்தவாறருளுநீர்மையால்

 

235      ஒன்றியகலையெலாமோதியேயுணர்

வென்றிமேவியபுகழ்வியாதன்றன்னரு

டுன்றியவருந்தவச்சூதமாதவ

வின்றெமக்குரையெனவியம்பினானரோ

 

வேறு

236      கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற்

கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின்

மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந்

துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்

 

237      அந்தநல்வனத்தினாதிகாலத்திலரியயன்முதற்கடவுளர்கள்

வந்துபோற்றிசைக்குமாண்பினதாகிமலைமகள்வளர்க்கும்வான்றருவாய்ப்

புந்திகொள்பாரிசாதமென்றொருபேர்புனைந்துநீங்காதுபொங்கொளியா

யிந்திராதியர்சேரெண்டிசாமுகத்துமெங்கணும்பரந்துமிக்கிலகும்

 

238      கெழுதருநன்னீர்க்கிருதமாலையெனுங் கேழ்கிளர்வைகையங்கரைமேன்

மொழியுமத்தருவின் மூலத்தினோங்கி முளைத்தெழுசிவலிங்கவடிவாய்

வழிபடுமடியார்மனங்கொளநினைந்தவரந்தனைநினைந்தருள் புரிந்து

விழைவினெஞ்ஞான்றும் வீற்றினிதிருப்பன்விண்ணவன்கண்ணுதற்பெருமான்

 

239      செங்கண்மால்விடையூர்சிவபிரான்றனக்குத்தெக்கிணதிக்கதிற்றிகழந்து

மங்கலவிளைவான்மறைமுறைவழாதுமன்னியவத்தலந்தன்னி

லங்கண்மாஞாலமெங்கணும்புகழுமழகியமின்னனையாகி

யெங்கணாயகிதானிருந்தவம்புரிந்தே யியைந்திடுமியல்பினெஞ்ஞான்றும்

 

240      அன்னதொல்சிறப்பி னருந்தவமிழைக்குமந்தநற்பொற்கொடியான

கன்னிதன்முன்னேகருங்கடற்றோன் றுங்கதிர்க்குலம்பரப்புமாதவன்றான்

பன்னுமான்மாக்கள்பாவத்தை யொறுப்பான்பண்புறத்திருமணிகன்னி

யென்னுநற்றீர்த்தமேழுலகேத்த வெழில் பெறத் தொட்ட தொன்றுண்டால்

 

241      இந்தநற்றீர்த்தந்தன்னையோரொருகாலிசைப்பவருறுபவமொழிவர்

வந்ததிற்படிந்தமாத்திரையதனின்வருபிறப்பனைத்தையுமாற்றிச்

சந்ததம்பொருந்துசச்சிதாநந்தத்தடங்கடற்றடத்தினிற்படிந்தே

யந்தமாதியிலாவருளுடன்கலந்தேயார்வமாமுத்தியைச்சேர்வார்

 

242      சித்திரவலங்காரத்துடனுயர்வான்சேருமக்கற்பகமூலத்

துத்தமதவங்கட்குறுதவப்பலங்க  ளுதவுமெம்பிரானுவந்திருந்தே

யத்தருமலரா லருச்சனைபுரியுமன்பருக்காயிடையருளால்

வித்தகமிகுநல்வேண்டுருக்கொண்டுவேண்டினார்வேண்டியதளிப்பான்

 

243      அன்னதொல்புட்பவனத்ததுநாப்ப ணதிமனோகரமிகவுடைத்தா

யுன்னதமொருநான்கரையதாய்ச்சுற்றும்பாதயோசனையதையுடைத்தாய்ப்

பன்னுமூவுலகும்பாரிசாதமெனப்பகர்வதாய்ப்பணைபலவுடைத்தாய்

மன்னியபறவைவிலங்குகடம்முள்வருபகையொழிந்திடவைகும்

 

244      அத்தருநிழற்கீழமரிலிங்கத்தினருளினாலாயிரங்கதிரோ

னித்தமாய்த்தனாதுபதம்பெறுகிற்பா னினைந்துநெஞ்சகங்கொண்டே

சித்திரைத்திங்கட்சித்திரைத்தினத்திற்றேசுறப்பூசனை புரிவான்

சுத்தநீராடித் தூயநீறணிந்து துலங்குகண்டிகைமணிபூண்டு

 

245      பொங்குலகேத்தும் பூர்வலிங்கத்திற் பொருந்தவாலுகங்கொடுதிரட்டி

யங்கையினொன்றினமைத்ததினிகழ்த்துமாறு போலங்கணன்றன்னைக்

கங்கைதங்கியசெஞ்சடிலசேகரமுங்கதிர்த்திரணிலவு கான்றொளிருந்

திங்களங்கொழுந்துஞ்செங்கண்வாளரவுந்திருமுகமண்டலமைந்தும்

 

246      கண்கண்மூவைந்துங் கரங்களீரைந்துங் கவின்றிகழ்படைக்கலங்களுநஞ்

சுண்டிருள்பரந்தகண்டமும்பகுவாயுற்ற நற்பன்னகாபரணங்

கொண்டதிண்டோளுங்கோலமார்பகமுங்குலவுசங்கக்குழைக்காதும்

புண்டரிகத்தினுரிபுனையரையும்பொருந்திய பொற்பதாம்புயமும்

 

247      சுத்தமாமிதயகமலத்தினின்றுஞ்சுழுமுனாமார்க்கத்தினாலே

சித்தநேர்நிறுவித்துவாதசாந்தத்திற்சேர்ந்துறுசிறந்தமந்திரத்தா

லத்தகுபிராணவாயுவால்வாங்கியலர்தருகரத்தினிலமைத்துச்

சத்தியோடுரியசதாசிவமூர்த்திதன்னையே நன்குறநிசித்து

 

248      வண்ணமேவியநன்மதுமலர்தன்னைவண்கரங்கொண்டுபின்கூப்பி

யுண்ணிகழ்சமனையுன்மனைக்கப்பாலோங்கியே நிட்களமாகித்

தண்ணிலாவெறிக்குஞ்சந்திரரநேகர்தந்தநூறாயிரவொளிசே

ரெண்ணருஞானவுருவமாஞ்சிவனையிலிங்கமத்தியத்தினிலிருத்தி

 

249      தாபனஞ்செய்தபின்றகுசந்நிதானஞ்சந் நிரோதனந்தந்து

மாபரன்னறக்குச்சுவாகதார்க்கியமும்வழங்கியே காளகன்னிகையுஞ்

சோபனவிலிங்கமுத்திரையுடனேதுலங்குகைகூப்புமுத்திரையுந்

தூபமுமலிங்குதீபமுங்கொடுத்துச்சுகந்தநன்மஞ்சனமாட்டி

 

250      திலந்தருதயிலந்தேனுவைந்துவந்து சிந்தைகொள்கின்ற வைந்தமுத

நலந்தருமான்பானண்ணிடுந்ததிநெய்நன்மதுகன்னலின்சாறு

பலங்குளிர்தெங்குசந்தனக்குழம்புபத்தியினாட்டி நீராட்டித்

துலங்கியவைகைத்துறையினீர்சுமந்தசுரிமுகச்சங்கநீராட்டி

 

251      மகிழ்தருதிருவொற்றாடையுஞ் சாத்திமருவுசெம்பட்டுடன் மன்னு

மகமகிழ்கலவையாரமேலணிந்தேயரவகங்கணங்கரத்தமைத்துப்

பகர்நவமணிகள்படர்வெயிற்கிரணம்பரப்புமாபரணமுமணிந்து

திகழ்மணிமகுடஞ்செங்கதிரெறிப்பத்திருமுடியிலங்குறச் சேர்த்தி

 

252      பரவிடுநைவேத்தியம்பலவளித்துப் பாத்தியாசமனமுங்கொடுத்துத்

திருமிகுதூபதீபமுங்காட்டித்திருவெழுத்தஞ்சையுஞ்செபித்தாங்

குரியநற்பூசைப்பலனரற்குதவியோரிருகாலமுஞ்செய்து

குருமலர்கொண்டுபணிந்தெதிர்முக்காற்கும்பிட்டுத்தட்டமுமிட்டு

 

253      நிருத்தனுண்மகிழநிருத்தமுஞ் செய்து நீடுநற்கனவதிலின்னுந்

திருத்தகுமயன்மாறேடியுங்காணாச்சிவலிங்கதரிசனங்காணுஉ

வருத்தியாற்கண்களருவிநீர்பொழியவாநந்தபரவசனாகித்

தரித்திடுஞ் சென்னிக்கரத்தினனாகிச்சதுர்மறைத்துதிபடித்தனனால்

 

வேறு

254      சுகரன்புடையானேதுதிசொல்வார்புடையானே

யிகல்சார்படையானேகுறளெழுசூழ்படையானே

திகழ்கண்படையானேயுறுசெனனம்படையானே

புகழ்மன்றுடையானேபொருபுலித்தோலுடையானே

 

255      அண்டங்கரியானேயரியயர்கட்கரியானே

விண்டங்கொளியானேசதுர்வேதத்தொளியானே

பண்டங்கிசையானேயுறுபவமொன்றிசையானே

கண்டங்கரியானேநுதற்கண்டங்கரியானே

 

256      மேவும் பொருவில்லாய்மகமேருப்பொருவில்லாய்

சேவின்றுவசத்தாயருடினமொன்றுவசத்தா

யோவில்லுயிர்க்குயிராய்திருவுருவம்பரமுயிராய்

தாவில்சிவபதத்தாய்திகழ்தருதாமரைப்பதத்தாய்

 

257      கதிநல்குசங்கரனேயுலகவைநீக்குசங்கரனே

விதிநல்குகங்கையனேசடைமிசைதாங்குகங்கையனே

கதநல்குமங்கணனேயுமிழ்கடுநாககங்கணனே

திதனானவங்கியனேதிகழ்திருமேனியங்கியனே

 

258      மனமொன்றுமெம்மானேமழுமானேந்துமெம்மானே

புனல்சேர்சடையானேபுவிபுகழ்மாசடையானே

சினமால்விடையானேயடிசேராவிடையானே

கனலேந்தினகரனேயெனத்துதித்தான்றினகரனே

 

வேறு

259      அன்னதோர்காலைதன்னிலவ்விலிங்கத்துநாப்பண்

கன்னியாயுலகமீன்றகௌரிமெய்கலந்துதோன்றச்

சென்னியிற்றிகழ்ந்தகற்றைச் செஞ்சடாமகுடவேணி

மன்னியமதிக்கொழுந்தும்வாளராவிலங்குமார்பும்

 

260      அங்கண்மாஞாலங்காக்குமபயமும்வரதமுஞ்சேர்

பொங்கொளிதிசைவிளங்கும்போர்மழுப்படையுமானும்

வங்கவாரிதியினஞ்சமருவுகந்தரமுமேனி

தங்குவெண்ணீறுமிக்குத் தயங்குகண்டிகைநற்றாரும்

 

261      கோடிசூரியருங்கோடிகுளிர்மதித்திரளுமொன்றாய்

நீடியவொளியும் வேங்கைநிகழ்பொறியதளுந்தோன்ற

மாடுறுமயன்மால்விண்ணோர்மாதவர்முநிவர்போற்றத்

தேடரும்பொருளையந்தத்தினகரன்றெரியக்கண்டான்

 

262      நித்தமாயருள்சுரக்குநிருமாலன்றன்னைக்காணுஉ

வத்திரமின்றியானேயதிபதியாகவேண்டுஞ்

சுத்தமாமென துமிக்கதொல்லிரும்பதத்திற்கென்னாப்

பத்தியாற்சததளச்செம்பங்கயபதத்தில்வீழ்ந்தான்

 

263      பதந்தனில்வீழ்ந்திறைஞ்சும்பரிதிவானவனைநோக்கிக்

கதங்கொடுகாமற்காய்ந்தகண்ணுதல்யாருங்கேட்ப

விதங்கொளீரேழ்பொழிற்குமிக்கிறையாயிலங்கி

வதிந்துநீவாழ்நாள்காறும்வாழ்கெனவரங்கொடுத்து

 

264      திக்கிலகொளிப்பரப்புந்தினகரகேளெமக்கிங்

கக்கினிகோணந்தன்னிலரும்பெருந்தீர்த்தமொன்ற

மிக்கபூமுகையவிழ்ந்து வெறிகமழ்தரவிளங்குந்

தக்கநின்னாமந்தன்னாற்சதுரமதாகத்தந்து

 

265      மலர்தலையுலகம் போற்றமணிகன்னியென்னுநாம

நிலையுறநிறுவிநாளுநீடொளியிலங்கக்காண்டி

குலவிடுநின்னாற்பூசைகொண்டுநல்லருளால்யாமு

மிலகினமித்தலத்திலென்று மிவ்விலிங்கந்தன்னில்

 

266      வீசியவிருள்கால்சீக்கும் வெஞ்சுடர்ப்பரிதிநின்றன்

பூசனைபுரிந்தமேலாம்புண்ணியபரிபாகத்தா

லாசைகூர்ந்தருளாலிந்தவணிகிளர்பாரிசாதத்

தேசுறுதிருநிழற்கீழ்ச்சேர்ந்துடன் றிகழாநின்றோம்

 

267      இச்சையாலுருவங்கொண்டேயிருக்கும் நம்மிலிங்கத்திற்குப்

பச்சிமதிக்கினோங்கும் பாரிசாதத்தின்மூல

நிச்சயமுறயாமென்று நிகழ்ந்தினிதிருத்தலாலே

யச்சுரதருமுன்செய்தவருந்தவம்யாதோவென்றான்

 

268      கருணைகூர்கனலிதெய்வகம்மியன்றனையழைத்து

விரிகடலுலகுக்கெல்லாமேதகுவிழைவுடைத்தாய்த்

திருமிகுகின்றசெம்பொற்சிகரநீள்கோயிலாக்கித்

தரைபுகழ்தீர்த்தமொன்று தன்னிகராகக்காண்டி

 

269      காண்டிநீயிருந்ததான கண்ணகன்ஞாலந்தன்னில்

வேண்டுபுமிகவுமேலாய்விளங்கிடவெந்தஞான்று

நீண்டகலிருவிசும்பினிறையணிகுறைபாடின்றிப்

பூண்டநின்பதத்திற்பின்னர்ப்போதியாலெனபுகன்று

 

270      பன்னரும்புவியின் மேலாம்பான்மைசேர்தானந்தன்னி

லுன்னருந்தவத்தின்பேற்றாலுத்தமோத்தமமித்தான

மன்னுமித்தலத்தின் யாவர்மருவியேமகிழ்வின்வாழ்வ

ரன்னவர்க்குண்டாமுத்தியென்பதற்கையமின்றால்

 

271      சந்ததம்விளங்கியாமித்தலந்தனிலிருத்தலாலே

வந்திவெண்வைகுவோர்க்குமருவுநம்மருளினாலே

யந்தமொன்றின்றிநாளுமறம்பொருளின்பம்வீடென்

றிந்தநால்வகையுமுண்டாமென்றனனெவர்க்கமேலோன்

 

272      பூதலத்திருள்விலங்கிப்பொங்குவெங்கதிர்பரப்பு

மாதவன்றனக்குநாதனருளுருவாகத்தோன்றி

மேதகுமந்திரத்துண்மிக்கமந்திரமாயுற்ற

வோதருமஞ்செழுத்தைவிதிப்படியுபதேசித்தான்

 

273      அவ்வுபதேசந்தன்னையங்கணனருளக்கேட்டுக் கவ்வையொன்றின்றிமிக்ககருத்தினையொருக்கிநேராய்ச்

செவ்விதினுணர்ந்து மேலாந்திருவருள்கண்ணாக்காணு

மிவ்விறையிருந்தவாறிங்கிப்பரிசெனத்​தெளிந்து

 

274      வானந்தத்தருவின்மூலமருவிவெம்பரிதிவானோன்

ஞானந்தானிமூதென்றோதுநற்றிருவஞ்செழுத்தான்

மோனந்தானாகியன்பின்மோகித்துமுடியாவின்ப

வானந்தத்தழுந்தியொன்றாயற்புதமடைந்திருந்தான்

 

275      அருளுடன்கூடியொன்றாயானந்தத்தேனருந்தும்

பரிதிவானவனையெங்கோன்பங்கயச்செங்கைதன்னாற்

கருணையிற்பரிசித்தந்தக்கதிரவன்கண்டாக்காமுன்

றிருவருள்பிரகாசிக்குஞ்சிவலிங்கந்தனின் மறைந்தான்

 

276      தீதறப்பரிசிக்கின்றசிவகரவிசேடந்தன்னா

லாதரத்துற்ற நேயமதினின்றும்விழித்துப்பாரா

வோதுபுத்தேளிர்தம்மாலொருவராலறியவொண்ணா

நாதனைநேடிக்காணனற்றியானத்தினுற்றான்

 

277      நீடுமத்தியானநீங்கிநேரில்பஞ்சாக்கரத்தைப்

பீடுறவுபதேசங்கொள்பெருகொளிப்பரிதிப்புத்தேள்

வாடுநுண்ணிடைசேர்கின்றமங்கைபங்கொழித்த வெங்கோன்

கூடுமன்பினிலெடுத்துக் கூறியதகத்துக் கொண்டான்

 

வேறு

278      அந்தவாறருளினாலமைப்பனென வண்ணறன்றிருமுனண்ணுசீர்

சுந்தரம்பெறநிறைந் திலங்குகதிர்துன்றுதன்றனது செங்கையாற்

கந்தநீர்மருவவுந்துகாதலொடுகல்வியுற்பலசுகந்தநேர்

சந்தமேவுமரவீந்தமாகமிகுசதுரநன்கொடுசமைத்தரோ

 

279      நானமேவுநர்தமக்குநன்குமிக நண்ணநெஞ்சகமதெண்ணியே

யூனமில்கருணைஞானதேசிகனுரைத்தமந்திரமதுற்றசீர்

மோனஞானமுடன்மூழ்கியத்துவிதமாகியின்புடன்முயங்கியே

வானளாவிவருகங்கையாதிதிருமன்னுதீர்த்தமவையுன்னியே

 

280      தற்பரம்பொருளினாணையாலுரியதாபனஞ்செய்துதருக்கினான்

மற்றுமோரிணையிலாதவேதநெறிமந்திரந்தனைமொழிந்துசங்

கற்பபூருவமதாகநெஞ்சினிடைகருணைகூர்ந்துவகைகருதிநன்

குற்றதீர்த்தமடுமூழ்கினானுலகினோங்குபேரொளியினும்பரான்

 

281      மாதிரம்பரவுமாதிபுட்பவனவைபவத்தினதுசெய்தியாற்

சோதிகட்குமிகுசோதியாயிலகுதுங்கமேவுதிரளங்கமா

யோதுயிர்க்குமுதலோனுமாகியுயருத்தமத்துறுவரத்தையேய்ந்

தாதபக்கடவுணாதனுற்றவுலகாதிபத்தியமடைந்தனன்

 

282      மன்னுநல்விசுவகன்மனைக்கருதிவம்மினென்றுகொடுவல்லைகூய்ப்

பொன்னினோங்குவளர்புரிசையைந்தினொடுபொற்பினீடுமுயர்கோபுரந்

துன்னுகின்றசிகரங்களோடிலகுசோதிமாமணிகொளாலயம்

பன்னுமாடமிகுமண்டபங்கள் சிலபண்டுபோற்பரிதிகண்டனன்

 

283      பொற்பினீடியசதாசிவத்தின்மகிழ் பூவணத்துறைபுராதனர்க்

குற்சவந்தனைநடாத்தவெண்ணிமன்னுவகைபூத்தெழுசுவேச்சையால்

வெற்றியானைமுகனாதிவிக்கிரகம்வேறுவேறுமறைவிதியினா

லற்பின்மேதகையசெம்பொனாலுருவமைத்துநன்மணியழுத்தியே

 

284      கதிரவன்றனதுபெயரினானிலகுகாந்திநாயகனெனும்பெயர்

மதிவயங்கவணிமகுடசேகரநல்வானவன்றனையுமன்றினிற்

சதியினிற்றன்மிகுதாண்டவஞ்செயருடம்பிரான்றனையளித்துநூல்

விதிபதிட்டை செய்துவேதபூசையும்விழாவு மேத்திடவிளக்கினான்

 

285      வையகத்தின்மலமாயைகன்மமறமாற்றியேவதியுமந்தணீர்

பொய்யிலன்புகொடுபொங்கிலிங்கமதுபோற்றிசெய்துபுரிபூசையாற்

றெய்விகந்தருவிமானமீதுகொடுசெஞ்சுடர்ப்பரிதிவானவன்

வெய்யமாமணியின்மிக்கிலங்கணிவிளங்குதன்னுலகின்மேயினான்

 

286      பொருவில்புட்பவனவை பவத்தணிபுகழ்ந்திடும்புவனமெங்கணு

மரியவப்பதியின்மேன்மையீதெனவளந்துரைக்கவெளிதாகுமோ

பரவுமப்பதியின்வைகுநர்க்குரியபரபதம்பகர்தல்சரதமாந்

தருணமிக்கபுகழருண்மனத்திடைதருக்கிவாழ்மிகுதவத்தினீர்

 

287      யாதொர்புட்பவனவத்தலத்தினரனஞ் செழுத்தையருள்செய்தனன்

யாதொர்செங்கதிர்தனக்குமந்திரவெழுத்தினிற்பலமேய்ந்திடும்

யாதொர்நற்றலமதென்பதொன்னறுதற்குநேர்புகலலாவதோ

யாதொர்நற்றலமதுண்டெனப்புகறலாவதோர் தலமுமில்லையே

 

288      ஞாலமீதிலருண்மேனிகொண்டுவருஞானதேசிகனதருளினா

லாலநீழலறநால்வருக்கருளுமண்ணறன்றிருமுனண்ணியே

சீலமோடுதிருவஞ்செழுத்தையொருகால் விதிப்படி செபித்துளோர்க்

கேலுமுத்தியிமூதையமென்பதிலையிருபிறப்பின்வருமிருடிகாள்

 

289      மண்ணுகின்றமணிகன்னிகைப்புனலில்வந்துமூழ்கியருணந்துசீர்த்

தொன்மரத்தினுறுநன்னிழற்கண்மகிழ்துன்னுசோதிதிருமுன்னரே

பன்னுமன்னதுபதேசம்யாவர்சிலர்பண்ணினோரதுபரித்துளோ

ரின்னபான்மைநிகழிருவரும்பொருவிலீசனல்லுருவிசைகுவார்

 

290      இந்தநற்பதியிடத்தினீறணியுமெண்ணிலாருயிர்களுக்கெலா

மந்தமிக்கதிருவஞ்செழுத்தினுபதேசமெய்தலரிதரிதரோ

விந்தநற்கலியுகத்தினிந்தவுபதேசமானதுபலிக்கிலிங்

கிந்திரப்பதவியின்பமுற்றுமிகவுடையவன்கதியடைவரால்

 

291      வெந்தழற்பொடியையொக்குமித்தலம் விளம்பிலென்றவையுளங்கொளா

வந்துபொற்பின்மணிகன்னிகைக்கமலவாவிமூழ்குபலமேவலா

லந்தமற்றதிருவஞ்செழுத்தைவிதியடைவினிற் கொடுசெபித்தருட்

செந்தமிழ்ப்பொதியமுநிவனங்கை கொடுசிந்துவைப்பருகினானரோ

 

292      பன்னுகின்றவறுபதமுரன்றிசைகொள்பங்கயத்திருமடந்தைசேர்

பொன்னினீடுமுயர்புரிசைசூழ்ந்திலகுபூவணப்பதியின்மேவியே

மன்னுகங்கைமுதலாதிதீர்த்த மனமகிழ்வின்வைகுபுகழ்மாமணி

கன்னிகைப்புனலின் மூழ்குமன்னவர்கள்கயிலைவெற்பினிடைபயில்வரால்

 

293      மங்கலங்கொடனுமாகநற்றலை வழங்குகின்றதொருதிங்களிற்

பங்கயத்தினொடுபானல்செங்குவளைபன்மலர்கொண்மணிகன்னிகைப்

பொங்குநற்புனிததீர்த்தமாடுதல்பொருந்துமாறுகொடுபோதறான்

றங்கியங்கடையகிற்பரேலவர்கள்சங்கான்றனுருவங்கொள்வார்

 

294      சிவபிரான்றனதுதிருமுன்மேவுநதி தீர்த்தமன்னுமொருசார்பினி

னிவறல்சேர்தருமொரெய்யும்வெங்கணையெழுந்துசென்றுவிழுமெல்லைவாய்ப்

பவமெனும்பரலையெரிகொளுத்துமிகுபாவநாசமதெனும்பெயர்

நவையிறீர்த்தமதினாடினர்க்குலகநாடுமுத்தியதுகூடுமால்

 

295      சித்திரைகொள்சித்திரைமெய்திங்கள்கலைசேர்நாள்

வைத்தபுகழாதபனன்மந்திரநவிற்றி

யுய்த்தமணியோடையினினுச்சிதனின்மூழ்கி

நித்தனை வணங்குநர்கணீடுகதிசேர்வார்

 

296      இந்தநலிரும்பதியிருந்தகையியம்பின்

முந்தையொருநான்மறைமுடிந்தபொருடானாய்

நந்துசிவஞானமதுநன்குறுவதாகி

நிந்தையறுநின்மலமதாய்நிகழ்வதாகி

 

297      ஏதமிலதோர்பிரணவச்சொருபமேயாய்ப்

பாதகமறுத்திலகுபஞ்சவனமாகி

யாதிநடுவந்தமறியாதபரமாகி

யோதரியவாதிசைவசித்தாந்தவுருவாய்

 

298      பொருந்தியிடுமின்பமிகுபூவணமதன்கட்

டிருந்துணர்வின்யாவர்சிலர்சென்றுதரிசிக்கி

னருந்தவமிழைத்தருளினங்கிருடிகாளே

யருக்கதியவர்க்கடையுமையமிலையம்மா

 

299      கிட்டுபெயர்மன்னியகிரேதநலுகத்திற்

சிட்டர்தினமும்பரவுதேவிபுரமென்று

மிட்டமுறுகாமியமியாவுமருள்செய்யும்

புட்பவனமென்றுமுலகம்புகழுமாதோ

 

300      தேற்றமுறவேதிகழ்திரேதநலுகத்திற்

சாற்றிடுமிலக்குமிதனாதுபுரமென்றே

தோற்றமுறுமன்னியதுவாபரயுகத்தி

னாற்றலைப்பிரானகரமென்றுபெயர்நண்ணும்

 

301      ஈற்றின்வருகின்றதொரிருங்கலியுகத்தி

னாற்றிசைகள் போற்றிசெயுநன்குறுதவத்தோர்

மேற்றிகழும்வெஞ்சுடரின்மேதகையபேராற்

பாற்கரபுரப்பெயர்படைத்ததுபடிப்பால்

 

302      பூரணமெய்ஞ்ஞானமதுபுந்திகொடுவஞ்சம்

வேரறவகழ்ந்திடுநல்வேதியர்கண்மன்னோ

வேருறுமானந்தவனமென்றுமெணவொண்ணா

வாருயிர்கண்முத்திபெறுமாச்சிரமமென்றும்

 

303      திக்குலகெலாம்புகழ்சிதம்பரமதென்றும்

பக்கமுறுதக்கிணகாசிப்பதியதென்றுந்

தக்கசதுர்வேதபுரமென்றுமதுசார்பேர்

மிக்கபிதிர்முத்திபுரமென்றுநனிமேவும்

 

304      இத்தலநரர்க்குறவிருந்திருவளிக்கு

மித்தலமிரும்பவமியாவையுமொழிக்கு

மித்தலமிலங்குசிவஞானமதுநல்கு

மித்தலமநாதியுளதாயியையுமன்றே

 

305      தொக்கவுயிர்கட்கிலகுதொன்னகரிதன்னுட்

டக்கவரமிக்குதவுதந்திமுகவெந்தை

யிக்குலவுநற்பதியிரும்பெருமையாலே

முக்கணிமலன்றனையருச்சனைமுடித்தான்

 

306      வென்றிதருமித்தலநன்மேன்மையுறலாலே

யென்றனதுவாய்மையினிசைக்கவெனதன்றே

மன்றவொருநூறுவருடந்தனினுமாதோ

துன்றுகதைவல்லபடிசொல்லமுடியாதே

 

307      நிகழ்மறையுணர்ந்தசவுநகமுநிவநீடு

புகழுலகெலாம்பரவுபூவணமிகுஞ்சீர்

மகிழ்பிரமகைவர்த்தமாகியபுராணந்

திகழெழுபதென்னுமத்தியாயமிதுசொல்வார்

 

308      இந்தவகைகந்தனருணந்திபெறவின்பா

லந்தமில்பெருங்கயிலையின்கணருள்செய்தா

னந்துமறையீர்களெனநைமிசவனத்திற்

சுந்தரமிகுந்ததவசூதனுரைசெய்தான்

 

வேறு

309      இந்தனத்திடைசெந்தழல்வந்தபோலிந்தநற்பதிமுந்தவியந்ததோ

ரந்தநற்சிவலிங்கம்விளங்கவேயந்தரத்தவர்செங்கதிர்கண்டசீர்

தந்தவிக்கதைகண்டுபுகன்றுளோர்தங்குநற்செவிகொண்டுபுகழ்ந்துளோர்

புந்தியிற்கொடுவந்துபுகழ்ந்துளோர்பொங்குமுத்தியின்வந்து பொருந்துவார்

சூரியன் பூசனைச்சருக்கமுற்றியது

ஆகச் செய்யுள் 309

*****

 

இரண்டாவது

திரணாசனன் முத்திபெற்ற சருக்கம்

 

310      ஓதரியவுண்மையதாயோங்குபரி பூரணமாயுவமையின்றாய்ச்

சோதியதாய்ச்சுகவடிவாய்ச் சொல்லரிதாய்ச் சுருதிகளுந்தொடரொணாதாய்க்

காதலினாலனைவர்களுங்காண்பரிதாய்க்காரணகாரியங்கடந்த

வேதமறுபொருளினையாமிதயகமலத்திருத்தியிறைஞ்சுவாமே

 

வேறு

311      சத்தியஞானமார்சவுநகாதிப

வுத்தமராந்தவத்தோர்கள்சிங்கமே

சித்தநன்குணர்திரணாசனன்றிகழ்

முத்தியையடைந்தது மொழிகுவாமரோ

 

312      என்னலுமன்னுயிர்க்கிரங்கு…ன்னரு

ணன்னலந்தயங்கிய….கமுகத்தனாய்த்

தன்னிகரரு…. வச்சவுநகன்புகழ்

துன்…  சூதனைத்துதித்தன்மேயினான்

(…குறியிட்டுள்ள இடங்களில் எழுத்துக்கள் அழிந்துள்ளன)

 

வேறு

313      எம்பிரானருளினாலேயாவையுமுணர்தலானு

மம்புவியிடத்துரோமகருடணனெனும் பேரானு

மும்பருமுணரவொண்ணாவொரு பொருளுடைமையானு

மிம்பரினுனக்குநேராமிருந்தவவாணரின்றால்

 

314      உலகெலாம்பணிந்து போற்று முயர்தவத்தும்பரானே

நிலவுபேரின்பநல்குநீடருட்பெற்றியானே

குலவியநண்பெஞ்ஞான்றுங்கூட்டியகொள்கையானே

கலையுடையோர்கடம்பாற்கழிபெருங்காதலானே

 

315      சைவமார்க்கண்டங்காந்தந்தந்தங்கியவிலிங்கங்கூர்மம்

வையகம்புகழ்வராகம்வாமனமருவுமச்சம்

பொய்யறுபிரமாண்டஞ்சீர்பொருந்துநற்பவுடிகத்தோ

டெய்தியபிரமம்பாற்பமிசைத்திடுமிவற்றினோடும்

 

316      காதல்கூர்நாரதீயங்காருடம்வயிணவஞ்சூழ்

மாதிரம்புகழும்பாகவதத்துடன்மருவுமேத

பேதமிலாக்கிநேயம்பிரமகைவர்த்தமியாவு

மோதிடநின்னாற்கேட்டோமொன்பதிற்றிருபுராணம்

 

317      ஆங்கவைதன்னின்மேலாயறைந்தனையலர்ந்தசெம்பொற்

பூங்கொடிபடர்ந்துநீடும்பூவணமதனைப்பின்னு

மோங்கியகாதைநாப்பணுரைத்தனைபூருவத்திற்

பாங்கினாற்கும்பகோணமென்றொரு பதியதன்றே

 

318      மக்களுக்கிழைத்தநீதிமாதவம்பலிப்பதாகித்

தொக்கவெம்பிறப்பிற்சூழுந்தொல்பவந்துடைப்பதாகித்

தக்கசெல்வங்களெல்லாந்தானருள்புரிவதாகித்

திக்குடையுல்கம்போற்றுந் தீர்த்தங்கள் பலவுமாகி

 

319      கலிவலிதொலைப்பதாகிக்கண்ணகன்ஞாலந்தன்னி

னலகிலாவுயிர்கட்கெல்லாமாநந்தமளிப்பதாகிப்

பலமுநிகணங்களோடுபண்ணவர்பணிவதாகிக்

குலவுமாச்சரியமாகிக்கோதிலாச்சிரமமாகி

 

320      சோதியாயுலகமெல்லாஞ்சுத்தமாக்குவதாய்மேலா

யாதிதெய்விகத்தினோடுபவுதிகமான்மிகத்தைப்

போதல்செய்பெற்றித்தாயபூவணந்தன்னின்மன்னு

மேதகுதானமுண்டேல்விரித்திவண்விளம்புகென்றான்

 

321      விளம்புவனென்றுவேதவியாதன்மாணக்கன்சொல்வா

னுளங்கொளுந்தவத்தோரேறேயுற்றநின்பாக்கியத்தாற்

களங்கமின்றாயதோர்நற்காரணந்தன்னான்மாதோ

வளந்தறிவொண்ணாப்புந்தியடைந்தனையன்றோவென்றான்

 

322      மண்ணிலாயிரம்பிறப்பின்மனமொழிகாயந்தம்மாற்

பண்ணிடுங்கருமத்தாலேபல்பெரும்பதியினென்று

மெண்ணும்யாகாதிகன்மமியற்றியேதீர்த்தமாடி

நண்ணுபுண்ணியதானத்தினற்றவம்புரிந்துமாதோ

 

323      சொல்லருமின்பமுற்றுச்சுவர்க்காதிபோகந்துய்த்துப்

பல்பயனருந்திப்பின்னர்ப்பாரிடைநரர்களாகி

யல்லலொன்றின்றிநாளுமரியநற்றருமந்தன்னி

னல்லதொல்குலமுற்றோற்குநண்ணிடும்புந்திதானே

 

324      புந்திதானுடையதாகப் பொருவிடைப்பாகன்மேவு

மந்தணமானதானமான்மியந்தனைவினாவுஞ்

சிந்தனையுண்டாமீதுதீமையோர்க்கடையலாகா

திந்தநீர்முறைமைநீசெயிருந்தவப்பேறேயன்றோ

 

325      அந்தணர்தமக்குமேலோயானுநன்கடைந்தேனாக

நந்துநின்னளியென்றோதுநாரினாற்பிணிக்கப்பட்டேன்

முந்துசெல்வத்துச் செல்வமுழுதொருங்குடையோய்நின்னாற்

புந்திகொள்செல்வம்பெற்றோனாதலாற்புகல்வன்கேண்மோ

 

326      உலகெலாமொடுங்கும்போதினுததிகளேழுமொன்றாய்த்

தலைதடுமாற்றந்தந்துதாபரசங்கமங்க

ளிலயமதடைந்தகாலையிருந்தரைதனக்குநாளு

மலகில்காரணத்தினோடங்கமைந்தகாரியமுமாகி

 

327      பெற்றிடுமமுதகும்பம்பிரளயசமுத்திரத்தி

னுற்றதனாப்பணின்றுமுலாவுபுவதியுங்காலை

மற்றையததனைவிண்டுவந்துமுக்கூறுதந்து

சிற்சிலகாலஞ்செல்லத்தெருண்டவானணுகிமாதோ

 

328      பூவுறைதிருவின்மேலாம்பூவணந்தன்னின்முன்னுந்

தாவில்சீர்க்கும்பகோணந்தன்னிலாங்கதற்குப்பின்னு

மேவியததன்பினாமம்விளங்குநற்றலங்கடோறு

மூவுலகங்கள் போற்றுமுக்கணனருளின்வைத்தான்

 

329      நாமநீர்வையம்போற்றுநல்லமிர்தாம்மிசத்தொன்

றேமமாம்புட்பமாகியின்னமுதுருவமன்னிப்

பூமகள் பொருந்திவாழும் பொழிறிகழ்பூவணத்தின்

மாமணிகன்னிகைக்கண்வந்ததுவீழ்ந்ததன்றே

 

330      நிகழ்தருமருளினாலேநிறைந்தநன்னேயத்தோடு

மகிழ்சிறந்தோங்குமாதிவருணகேண்மருவுதீர்த்தந்

திகழ்மாயாதீர்த்தமென்றுஞ்செங்கண்மால்விடையின்பாகன்

புகழ்மணிகன்னியென்றும் பொருந்தியதிரண்டுநாமம்

 

331      தருமமாம்பொருடனக்குத்தங்கியவங்கிதிக்கிற்

றிருந்தழகியமின்னன்னைதிகழ்திருமுன்னர்ப்பாங்காற்

பொருந்துதெய்வீகமாமப்புநிததீர்த்தம்படிந்தோர்க்

கரும்பிரமகத்தியாதியாம்பவமனைத்துநீங்கும்

 

332      பொழிறிகழ்புராதனத்தெம்பூவணங்கோயில்கொண்ட

குழகனைத்தொழுமுன்செம்பொற்கொடிதனைக்கும்பிட்டோர்க

டொழுதிடுமக்கணத்திற்றொடர்புறுந்தோடந்தன்னால்

விழுவர்களகோரமென்னும்வெங்கொடுநிரயந்தன்னுள்

 

333      ஆதலினன்புகூர்ந்தேயரும்பெருங்கலைதெரிந்த

மூதறிவுடையோர்முக்கண்மூர்த்தியைத்தொழுகமுன்ன

மாதலினீதியாலேமங்கையையங்கைகூப்பிப்

பாததாமரையிற்பின்னர்ப்பணிந்திடக்கடவரன்றே

 

334      மெய்முநிகணங்கட்கெல்லாம்விழைவுறுந்தவத்தின்வேந்தே

யெய்தியதெனதுசிந்தையையமொன்றிதனையின்னே

பொய்யறுகேள்வியோய்நீபோக்குவதன்றியிந்த

வையகந்தன்னில்வைகுமாதவரில்லைமாதோ

 

335      என்னெனிலியம்பக்கேண்மோவிறைவியையிறைஞ்சுமுன்னர்த்

தொன்னெறிசிவலிங்கத்தைத் தொழார்க்குறுந்தோடமென்றி

யன்னதுதான்வந்தெவ்வாறடைந்திடுமீதுபூர்வந்

தன்னில்யான்கேட்டதின்றாற்சாற்றுதிதவத்தோயென்றான்

 

336      சாற்றுகேன்சநற்குமாரன்றானுமீதையமுற்றே

நாற்றலைப்பெருமான்றன்னைநணுகுமுன்னயந்துகேட்ப

வேற்றமாமிதிகாசத்திலெடுத்தவனிசைத்ததொல்சீர்

மாற்றமில்காதையொன்றுமாதவத்தலைவகேண்மோ

 

வேறு

337      முன்னாதியுகந்தனின்மோதுதிரைத்

தென்னார்ந்தகௌதமிதீரமுறு

மந்நான்மறையோர்குலமாதவனாம்

பன்னாசனன்றன்பரிவின்வருவோன்

 

338      திருவின்மகிழுந்திரணாசனனென்

றருமந்தபெயரதுதந்துடையோன்

றருமந்திகழ்வைதிகசைவனுளங்

குருவின்சரணங்குடிகொண்டிடுவோன்

 

339      வழுவாதருளின்வழிநின்றிடுவோன்

பழுதானவையொன்றுபகர்ந்தறியான்

முழுமாதவமென்றுமுடித்திடுவான்

செழுநான்மறைசேர்திருவாயுடையான்

 

340      மிகுமேதகுநல்விரதந்தருவோன்

றொகுமாதருமத்துறைநின்றிடுவான்

புகல்வேள்விகணன்குபுரிந்திடுவான்

சகவாழ்வுதணந்திடுதன்மையினான்

 

341      வேதங்கரைகண்டருள்வித்தகனீ

டேதந்தருசெய்கையிசைந்தறியா

னோதும்புவனத்துயிருக்குயிரா

நாதன்புகழன்றிநவின்றறியான்

 

342      செவ்வான்மதிபோற்றிகழ்நன்னுதலா

ரவ்வாழ்வெனுநீடலையாழியிடைக்

கவ்வாதுயருங்கதிதன்னையினி

யெவ்வாறடைவோமெனவெண்ணினனால்

 

343      பொய்வாழ்வினையேபொருளென்றுதின

மெய்வாழ்வினையேவிடுகின்றனமா

லைவாய்வருபொருளினவாவினைநீத்

துய்வான்வழியாமுணர்கின்றிலமால்

 

344      பேராதுறுநற்பொண்ணாசையினா

லாராதுலகத்தடையக்கடவே

னேராருமிலாநிமலன்னருளாற்

சீரார்கதியெவ்வழிசேர்குவனால்

 

345      விண்ணாடர்களும்மேலானவரும்

பெண்ணாசையினாற்பிழைபெற்றனராற்

பெண்ணாசைவிடப்பெறுகின்றவரே

கண்ணார்நுதலான்கழல்சேர்குவரால்

 

346      சிறைசேருடலின்செயன்மாண்டிடவோர்

குறிதானருளுங்குருதேசிகனா

லறிவாலறியுமருளாலறியப்

பெறுபேறினியான்பெறுமாறெவனோ

 

347      கைம்மான்மழுவுங்கனல்சேர்விழியு

நம்மாதரவானனிநாடரிதா

லிம்மானுடர்போலிம்மாநிலமேற்

பெம்மானருளப்பெறுமாறெவனோ

 

348      என்னாவிவைபன்னியிரங்கியெழா

முன்னான்மறையோதியமூதறிவாற்

றன்னாசிரியன்றனை யெய்திடுவா

னன்னாமநவிற்றிநடந்தனனால்

 

வேறு

349      கோடிவான்மதியமுங்கோடிபாநுவு

நீடியபேரொளிநிறைந்தமெய்யனை

வீடருந்தவத்தினான்மிகச் சொலித்திடும்

பீடுறுதேசினாற்பிறங்குவான்றனை

 

350      படர்புவியிடத்துயிர்க்கருளும்பான்மைசேர்

நடையனைநான்மறைநவிற்றுவான்றனைத்

தடைபடாதருளினாற்சார்ந்தநெஞ்சனை

யிடருறுமில்லறமிறப்பிப்பான்றனை

 

351      புண்டரநீற்றணிபொலிந்தமுண்டனை

வெண்டிருநீறதுவிளங்குமெய்னைக்

கண்டிகைகொண்டிடுகவின்கொண்மார்பனைக்

குண்டிகைதாங்கியேகுலவுங்கையனை

 

352      முருகவிழ்தாமரைமுகத்தினான்றனைப்

புரிமணமிசையினிற் பொருந்துவான்றனைத்

திரிபுரமெரிசெய்தசிவபிரான்றனின்

மருவியதிருவுருவயங்குவான்றனை

 

353      விட்டிடும்வேணவாவேட்கையான்றனைச்

சிட்டர்கள்பரவிடுந்தேசிகன்றனைக்

கட்டுவார்சடையனைக்கருதருந்தவ

முட்டறுரோமசமுநியைக்கண்டனன்

 

354      மூண்டெழுகாதலான்முடுகிக்கண்ணுறீஇப்

பூண்டபேரன்பின்மெய்புளகம்போர்த்தனன்

மாண்டகுசிந்தையன்வரம்பின்மாதவங்

காண்டகுமுநிவரன்கழலிறைஞ்சினான்

 

355      அருள்பெறுமாசையாலடியற்றேவிழு

மரமதுவென்னவேவல்லைவீழ்ந்தெழீஇக்

கருணையங்கடலதாங்கடவுள்கேளெனாக்

குருபரனோடிவைகூறன்மேயினான்

 

வேறு

356      மங்கையர்மைந்தரென்னும்வங்கவாரிதியின்மூழ்கிப்

பங்கமதுற்றியான்செய்பவத்தினாலழுந்துகின்றே

னங்கதினழுந்தலாலேயறம்பொருளின்பம்வீடென்

றிங்கிவையொன்றுந்தேறேனியம்பிடினிவற்றினென்னாம்

 

357      இல்லிடையிருந்தலாலேயில்லதேயுண்டாம்பின்னர்ச்

செல்வம்வந்தடையுமந்தச் செல்வமுந்தேயும்பின்ன

ரல்லல்வந்தடையும்பின்னரகமகிழ்வுண்டாம்பின்னர்ப்

புல்லுதற்கரியமேலாம்புத்திரராவரன்றே

 

358      புத்திரராயகாலைப்பொருந்திடுங்கீர்த்திமிக்கா

மத்தகுமதனானிந்தையடைந்திடுமடைதலாலே

மெய்த்தகுவியாதிவந்துமேவிடுமேவலாலே

நித்தமும்வருத்தநீடுநீடநித்திரையுண்டாகும்

 

359      நித்திரையான்மூதேவிநிகழுமங்கதனால்வேறோர்

மெய்த்தனம்விருப்புமத்தான்மிக்கிடுந்துன்பமுற்றுச்

சித்தநன்னிலைதிரிந்துதிபங்கிநாடொறுமயங்கி

யத்தமாஞ்சுழியிலாழ்ந்தேயறவுமெய்வருந்துமன்றே

 

360      வருந்தவேநாளும்பாந்தள்வல்விடவடிவதாகி

யிருந்திடருழக்குமிந்தவில்லிடையியைந்துநாளும்

பெருந்துயர்கொடுகீழ்மேலாய்ப்பிறந்திறந்துழன்றேனானே

யருந்தவமியற்றினெவ்வாறடைந்திடுமின்பமுத்தி

 

361      குருபரவெனக்குநீயேகூறிடுகதிவேறின்றான்

மருவும்யாகாதிகன்மமாவிரதங்கள்சாந்தி

யரியநற்றவந்தானங்களன்றியே​யெளிதிற்சேரு

முரியதோர்கதிக்குபாயமுண்டெனினுரைத்தல்வேண்டும்

 

362      சுந்தரத்தவத்தாலங்கஞ்சொலித்திடுஞ்சோதியானே

சிந்தையினுணர்ந்துவல்லேதிருவருள்புரிதியென்ன

வுந்துகாதலின்மிக்கோங்குமுரோமசமுநியுவந்தே

யிந்தவாறுரைப்பக்கேட்டியெனத்திருவாய்மலர்ந்தான்

 

363      நந்துநான்மறைதெரிந்தநற்றிரணாசனப்பேர்

மைந்தனேமதிவயங்குமாட்சிமையுடைமையானே

யிந்தமாநிலத்தெஞ்ஞான்றுமெண்ணிடினரர்களாலே

வந்திடுமுபாயந்தன்னான்மருவியதருமமெல்லாம்

 

364      மெய்ம்மையதாகியிந்தமேதகுமுலக்குக்கெல்லாஞ்

சம்மதமாகிமுன்னஞ்சாற்றிடுமுபாயமின்றி

யம்மநிற்கறைதல்வேண்டியன்பினேமாய்ப்புகுந்தே

மிம்முறைமையினாற்சேருமென்பதுமதித்தாமன்றே

 

365      நற்பதிபலவுஞ்சென்றுநான்மறைவிதிவழாம

லற்புதமருவுதீர்த்தமாதடிநீயாங்காங்குற்ற

சிற்பரமாகியோங்குஞ்சிவலிங்கங்கண்டுசூழ்ந்தே

யுற்றபேரன்பினோடுமுவகையினுறப்பணிந்து

 

366      மதிவலோய்வாரிசூழுமலர்தலையுலகம்போற்ற

விதிமுறைவிசேடித்தன்பின்மிக்கதானங்கணல்கித்

துதிகொடிம்முறையினாற்றிற்றொல்பவமொல்லைநீங்குங்

கதிபெறலாகுமின்​றேற்காணலாந்தகையதன்றே

 

367      எனமுநிகழறியன்போடின்னருள்விடையுந்தந்தே

முநிவனன்றுரைக்குமந்தமுதிர்பழச்சுவையின்சொல்லா

லினிதுடல்புளகம்போர்த்தாங்கில்லறந்துறந்துவல்லே

புனிததீர்த்தங்களாடிப்புந்தியிற்கொண்டுபோந்தான்

 

வேறு

368      நயிமிசங்கெயைநற்பிரயாகையே

யயர்வில்புட்கரம்ரோமகருடணம்

பயிறருஞ்சுரபாண்டம்பைசாசமே

யியல்கன்மோதகேச்சுரமிராக்கதம்

 

369      கோதில்கோகன்னங்கோமுகைகட்கமே

நாதனன்குறுஞானகுண்டங்கதை

காதல்கூர்பிரபாசங்கபிலையே

பாதகந்தவிர்க்கும்பாபமோசனம்

 

370      கோபருப்பதங்கோவர்த்தனம்புகழ்

சீபருப்பதந்தீர்த்தந்தினந்தரு

மாபுகழ்க்காமசாரமாசற்றசீர்த்

தூபமிக்கெழுந்தூயசோணாசலம்

 

371      கேடிலாதகிருட்டிணவேணிநல்

வீடுநல்கிடும்வேகவதிம்மிகும்

பீடிலங்குசொற்பேசுப்ரயாணமாஞ்

சேடதீர்த்தந்திகழுந்திருநகர்

 

372      மிக்ககாஞ்சிகாவேரிவிலாளமே

தக்கசம்புதலமயறீர்த்தங்கள்

பக்கமோடுபடிந்துவிதிமுறை

தொக்கலிங்கங்கள்யாவுந்தொழுதரோ

 

373      பன்னுசெந்தமிழ்ப்பாண்டிநன்னாட்டினின்

மன்னும்வைகையின்வந்துபடிந்தபி

னன்னமென்னடையங்கயற்கண்ணியோ

டென்னையாளுடையானையிறைஞ்சியே

 

374      முன்பகர்ந்ததோர்யோசனைமூண்டிடும்

பொன்பயின்றதென்பூவணமேவியே

யின்பமாமணிகன்னிகையிற்படிந்

தன்பினன்னையையஞ்சலிசெய்தரோ

 

375      மிக்கவூழ்வந்துமேவிடவாயிடை

முக்கணன்றிருமுன்சென்றுதாழ்ந்தெழீஇப்

பக்கமோடுபதம்பணியாமலே

தெக்கிணாவர்த்ததென்றிசைசென்றனன்

 

376      சென்றுகாவதத்திற்றிகழ்திருச்சுழியற்சிந்துதீர்த்தம்படிந்தியல்பிற்

பின்றிகழ்பின்னல்பிறங்குவானவனைப்பெரிதருச்சனைமுடித்ததற்பின்

பொன்றிகழ்புரிசைப்பூவணத்தடைந்தப்புனிதநீர்படிந்ததன்கரைமே

லொன்றினனாகவோரிராக்கதனாயுழன்றுதன்னலமிழந்தன்றே

 

377      இருளறவுலகத்திருங்கதிபெறுவானெழில்பெறுபுனிதநீராடி

விரவுநல்லந்தவேதியன்றனக்குவிபரீதமாகவேமேவுங்

கருதருகிரமங்கடந்ததோடத்தாற்கதுமெனக்கலங்கியேயுள்ளம்

பரவழன்றினும்பைசாசமெய்கொடுவெம்பசியினாற்பரிதபித்திருந்தான்

 

378      ஆனதோர்காலையருவினைப்பயத்தாலங்கணனற்பதங்காண்பான்

றேனிவர்வாசந்தினங்கமழ்பொழில்சூழ்தென்றிருப்பூவணந்தன்னிற்

பான்மைசேரிரண்டாம்பரிதிகண்டாங்குப்படர்ந்தபேரொளிநிழற்படிவ

நான்மறைபயிலுநல்லிசைவீணைநாரதமுநிவனண்ணினனால்

 

379      ஆயவன்றன்னையந்தமாமுநிகண்டையவென்றமுதமாமொழியாற்

பேயினதங்கம்பெற்றனையாரேபெரும்பசியுற்றனைபோலா

நீயுரைவிளம்புகென்னலுமவன்பினீடுபேருவகையிற்கூடித்

தூயமாதவனைத்தொழுதுகாண்கையினாற்றொல்லுணர்வடைந்திவைசொல்வான்

 

380      காதல்கூருலகிற்கனைகதிர்ப்பரிதிக்கடவுளையனையநாரதனே

யோதுமில்வாழ்வாமுததியினடர்ப்பட்டுறுகதிபெறுகுவான்விரும்பித்

தீதறுதீர்த்தம்யாவையும்படிந்தித்திருநகர்மருவுதீர்த்தந்தோய்ந்

தேதமாகியமின்னெனுமனைவாழ்வையெறிந்திடவெண்ணியானியைந்தேன்

 

வேறு

381      காதலுடன்மேவுவடுகக்கடவுடன்னைப்

பாதகமலங்கண்மிசைசென்றுபணிவுற்றே

கோதறுநன்னீர்கொண்மணிகுண்டமதின்மூழ்கி

யாதரவினேறினனகன்கரையினம்மா

 

382      அந்தவமையந்தனினல்லந்தணர்தமன்னா

சிந்தனைகலங்கிமெய்திரிந்தனனியானே

முந்தைவினையோவலதுமூண்டபவமேயோ

விந்தவிதிவந்ததெதுவென்றறிகிலேனே

 

383      நெருக்கியுதரத்தினுறுநீடுபசியாலே

யிரக்கமறமுன்பினியையாதனபிதற்றி

யரக்கவுருவாயிவணலக்கண்மிகவுற்றேன்

விரிக்கினிதுமுன்விதிவிலக்கிடவொணாதே

 

384      பரம்புபணைகொண்டெழுபராரைமரநீழல்

விரும்புமொருவன்றலைவிழுங்கனியையொக்கு

மிரும்புனலியாத்திரையினெண்ணமுறுமென்முன்

புரிந்ததவநீமகிழ்பொருந்திவரலாலே

 

385      உன்னையலதோர்கதியுரைத்திடவுமுண்டோ

வன்னதினின்முன்னிகழுமாயிரசென்மத்தின்

மன்னுபவநின்னடிவணங்கிடவகன்ற

தின்னினிமகிழ்ந்திவணிரங்கியருளெந்தாய்

 

386      என்னலுமிரங்கிமிகுமின்னருள்சுரந்தே

யன்னவனைநின்னிலெனவங்கையினமைத்தே

மன்னியசெழுங்கமலவள்ளல்பெறவந்த

நன்மகதிவீணைபயினாரதனிசைப்பான்

 

387      அந்தணர்குலத்தலைவவஞ்சலினியஞ்சல்

வந்துளதொர்காரணம்வகுத்திடுவனின்னே

புந்திகொண்மெய்பூவணபுரத்தினினிதாக

முந்தியுரைதந்தபரமுத்தியதுவுண்டே

 

388      நீவிதிவசத்தினவணேர்ந்துமணிநீடும்

பூவணபுரேசனிருபொன்னடிதொழாதே

தேவியிருபாதமலர்சென்றுதரிசித்தே

மேவினைபின்வேறொர்பதிவென்றியுடனன்றே

 

389      வேதியர்குலாதிபவிளம்பிடுவனீயிப்

போதுமலர்மாதுதிகழ்பூவணபுரஞ்சேர்

நாதனைவணங்கியபினாயகிசெழும்பொற்

பாதமலரன்பொடுபணிந்துபவநீப்பாய்

 

390      காசிகெயையீசனடிகாமர்புனன்மூழ்கி

நேசமொடிறைஞ்சினர்கணேர்ந்தபலனெல்லாம்

பூசுரர்களாசைதருபூவணமெனும்பே

ராசில்பதிவந்தடையுமையமிலையம்மா

 

391      ஓர்கவினுமோதிடுவமுண்மையிமூதுண்மை

பூர்வமதுவாகியதொர்பூவணமதன்க

ணேர்தருமெம்மானைமுனிறைஞ்சுதல்செயாரே

லூர்கிருமியார்நிரயமுற்றிடருழப்பார்

 

392      அவ்வளவதன்றுலகிலாய்வருவர்நாயா

யிவ்வுரைநன்மந்தணமியம்பிடுவதன்றால்

​வெவ்வினைகடிந்துதவமேன்மைபெறலாலே

செவ்விதினினக்கிதுசெப்பினமியாமே

 

393      பன்னுதுமியாமுனதுபாவமறவீடு

முன்னினுலகம்புகழுமோர்புனிததீர்த்த

மின்னதெனவேயறிவதெம்மிறைவனன்றி

யன்னதனின்மேன்மைதனையாரறியகிற்பார்

 

394      பூர்வமுறுமீசனதுமுன்னமுறுபூர்வத்

தோர்தருமைஞ்ஞூறுவரிவிற்கிடையினுற்ற

தேர்கொள்கடிவாசநனியியற்றியததற்குப்

பேர்பிரமதீர்த்தமெனவேயுலகுபேசும்

 

395      புத்தியொடபுத்திதருபூர்வகருமங்க

ளித்துயர்வருங்கிரமபங்ககருமங்க

ளுத்தமகுலோத்தமவிமூதுண்மைபடிவுற்றாற்

சித்தமகிழப்பிரமதீர்த்தமதகற்றும்

 

396      அருந்தவரைநிந்தனையறைந்தவதிதோட

மிருங்குலவொழுக்கமதிகந்தகனதோடம்

பரந்திடுமந்நீர்விழிபரப்புவதனாலே

பொருந்துமரனாணையதனாலிவைகள்போக்கும்

 

397      கார்த்திகைநன்மாதமுறுகார்த்திகைநன்னாளிற்

றீர்த்தர்தினமும்படிசெழும்பிரமதீர்த்தங்

கூர்த்தவறிவோயதுகுளித்திடுகளித்தே

யார்த்திடுமரக்கவுருவக்கணம்விடுப்பாய்

 

398      நாடிநவில்கின்றமறைநாலுமுகனன்னீ

ராடியிடினன்றியிவரக்கவுருவந்தான்

வீடலரிதாகுமுயர்மேதினியின்மீதோர்

கோடிசனனங்களவைகூடினும்விடாதே

 

399      இன்னதொருதீர்த்தமதிளின்னலமியம்பின்

முன்னுரிமைசேருமுகமுற்றுமதினின்றாம்

பின்னுறுமுகத்தில்வருபெற்றியினுமின்றா

மன்னதனின்மூழ்கினெவரும்மதிகராவர்

 

400      ஆதலினரும்பவமகன்றிடுமதன்க

ணீதகைமையோடமர்திநீடுகதிகூடும்

பூதலமெலாம்பரவுபுட்பவனமேமுன்

னோதுபலநற்பதியினுத்தமமதாகும்

 

401      பூர்வமதின்மேவிவளர்பூவணமதன்கட்

டேர்வருமருட்குறிச்சேவையதனாலே

பார்மிசைபடர்ந்துவருபாவமவையாவும்

நேர்படுதலாவதொருநிமிடமதினீங்கும்

 

402      காசிநகரிற் செய்தகடுங்கொடியபாவம்

பூசுரர்தினம்பரவுபூவணமதிற்போ

மோசைதருபூவணமுஞற்றியிடுபாவ

மாசரியபூவணமதன்கணதுதீரும்

 

403      ஈதுசரதம்மெனவியம்பியருளாலே

போதுவமெனாவினிதினாசிகள்புகன்றே

நாதமுறுவீணைபயினாரதனலங்கூர்

கோதிறிருமாலதுவைகுண்டமதடைந்தான்

 

404      பொற்சுவருடுத்துலகுபூவணமமர்ந்த

தற்பரனொடுற்றபரைதன்னையடிபேணிப்

பற்பகலுமன்பொடுபணிந்தருளின்வாழ்ந்து

நற்பரமமுத்திதிரணாசனனடைந்தான்

 

405      காதன்மிகுபிரமகைவர்த்தம்தினொன்று

போதவெழுபமூதெனப்புகலத்தியாயத்

தோதுமிக்காதைசவுநகவுணர்தியென்றான்

சூதனெனும்பேர்பரவுதொல்லுணர்வின்மேலோன்

 

வேறு

406      மருவுமிந்தநன்மந்தணமானதோர்மிகழ்பெருங்கதைவன்பவமானகா

னெரிபொருந்திடுமென்பர்கண்மேலையோரிணையிகந்துறுமிங்கிதன்மேன்மைதான்

பரவுகின்றவர்கள்பண்கொடுபாடினோர்பகரிரும்பொருடந்துசொல்பான்மையோர்

திரமுடன்செவிகொண்டிதுதேர்குவோர்சிவபெரும்பதிசேர்வதுதிண்ணமே

திரணாசனன்முத்திபெற்றசருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 406

*****

 


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.