குயிலும் காக்கையும் – அதிசயக் காட்சி

காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடுவது தெரிந்ததே. அப்போது காக்கை, குயிலை விரட்டும். அதன் பிறகு எப்போது காக்கையைக் கண்டாலும் குயில் பறந்தோடி ஒளியும். இன்று ஓர் ஆச்சரியம். முதலில் குயிலைக் காக்கை விரட்டுகிறது. பிறகு குயில், துணிச்சலுடன் காக்கையை வெருட்டுகிறது. ‘என் உணவை நீ எடுக்கிறாயா?’ என்ற உரிமையில் குயில் தன் வாயை அகலத் திறந்து, காக்கையின் அருகில் சென்று மிரட்டுகிறது. ஒரு வாய் உணவுடன் காக்கை பறந்தோடிப் போகிறது. இந்த அதிசயக் காட்சியைப் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)