சி. ஜெயபாரதன், கனடா 

அண்ட கோள்களை
முட்டை யிட்டு
அடைகாக்கும் கோழி !
ஆழியில் பானைகள் வடித்து
விண்வெளியில்
அம்மானை ஆடுவாள்
அன்னை !
பூமி சுற்றியது
பூதக் கதிரோனால் !
கடல் அலை உண்டாக்கும் நிலா.
மானிடப்
பிறப்பும் இறப்பும்
ஒரு சுழற்சி.
பேச்சும் மூச்சும்
மானிட வளர்ச்சிக்கு !
இளமை
பொழுது புலர்ச்சி
முதுமை
அந்திம தளர்ச்சி.
இரவு, பகல், மாதம், வருடம்
பருவ கால நிகழ்ச்சி.
பிறந்தவை யாவும் ஒருநாள்
இறப்பவை .
உலகில் பிறப்பும் இறப்பும்
உருவாக்கும்
ஒற்றை
பிரம்மாண்ட சக்தி எது ?
பிறப்பும்
இறப்பு மில்லாத
ஏகாந்த பூரணி
தனித்துவ படைப்பாளி
நிரந்தர
பிரபஞ்ச மூலம் எது ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *