பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?

0

சி. ஜெயபாரதன், கனடா

ஆப்பம் சுட்டுத் தின்ன முதலில்
அகிலம் ஒன்று
உருவாக வேண்டும்.
எப்படித் தோன்றியது நமது
அற்புதப் பிரபஞ்சம்?
தற்செயலாய் உண்டானதா?
தானாய்
உருவாக வில்லை யா?
சூனியத்தில்
வடிவாக வில்லை,
நியூட்டன் புற இயக்கி
முடுக்க
கரும் பிண்டம், கருஞ்சக்தி
இருந்தன மறைவாய்.
பூகோளம்.
சூரிய மண்டலத்தில்
பயிரினம் விளைந்திடவும்
உயிரினம் உருவாக
பூமி மட்டும் ஏன்
சீராக அமைப்பானது
காரண நிகழ்வு நியதியால்.
பூரணத் திறனுடை
மானுடம்,
பூமியில் மட்டும்
தோன்றியது
ஏன்?  ஏன்?  ஏன்?
நிலவு
ஒரு முகம் காட்டி
உலகை
வலம் வர வேண்டுமா?
நியூட்டன்
கரும் புற இயக்கி
முடுக்காது
உடுக்க டிக்கும்
பம்பரக் கோளம்
தன்னச்சிலே
சுழலுமா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *