இசைக்கவியின் இதயம் (பிப்ரவரி 16, 2023)

0

வணக்கம்.

இசைக்கவியின் இதயம் இரண்டாவது நிகழ்ச்சி. என் நலம் விரும்பிகள், என் இனிய நண்பர்கள் வியாசர்பாடி திரு குருமூர்த்தி ஐயாவும், மதுரத்வனி திரு ராமகிருஷ்ணன் அவர்களும் இணைந்து வழங்குகிறார்கள்.

கவிதையும் கானமும் என் உயிரின் இயல்புகள். கவிஞன் என்னும் இந்த அடையாளம் எனக்குத் தமிழ் தந்தது. என் பராசக்தி அந்தத் தமிழைத் தந்தாள்.

என் கவிதைகளும், கானங்களும் மணமற்ற மலர்களாக இருந்தாலும், அவை அவளுடைய தோட்டத்து மலர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

பிப்ரவரி 16, வியாழன், மாலை 6.30க்கு, சென்னை மயிலாப்பூர் லஸ் முனைக்கு அருகிலுள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில், என் கவிதைப் பொழிவு நடைபெறும்.

சென்றமுறை வ.வே.சு.வின் வாழ்த்துரை. இந்த முறை இளம் கவிப்புயல் விவேக் பாரதி!

வாருங்களேன்!

வரவியலாதவர்கள், நேரலையில் பாருங்களேன்: https://youtube.com/live/ZgtKvOxh9HY

அன்புடன்,
ரமணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *