எதிரியை மனதில் வைத்து நேர்ந்து கொள்
கிடாவெட்டி மேலே தெளிக்கும் உதிரம் துடை
அரிவாளால் இனிப்பு வெட்டி வாயில் ஊட்டு
பரிவட்டம் கட்டி உடல் முழுதும் சந்தனம் பூசு
தினமும் வீரத்தை பார்ப்போருக்கு சொல்லிக்கொண்டிரு
வாளின் குருதி காயும் முன் அடுத்தவனை குறி வை
பயந்து கொண்டே வாழ் இரவும் பகலும்
வீரம் வன்மத்தின் ஜனிப்பல்ல -ஆனாலும்
நடுங்கி கொண்டே நிதமும் வன்மம் பழகு .
வாள் தூக்க முடியாமற் போகும் நாள் வரும்- அன்று புரியும் –
ஆயுதங்களுக்கு என்றுமே வன்முறை தெரியாதென்று .
நான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது .
வயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி .
சொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .