சர்க்கரை நோயின் தலைநகரம் என இந்தியாவை அழைக்கிறார்கள். கோடிக்கணக்கானோர், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் கோடிக்கணக்கானோர், சர்க்கரை நோயின் தொடக்க நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இளம் வயதினருக்கும் சர்க்கரை நோய் வரத் தொடங்கியிருக்கிறது. நீரிழிவுக்கு என்ன்றே பிரத்யேக மருத்துவமனைகள் பரவி வருகின்றன. இந்த நோய்க்குத் தீர்வு என்ன என்று பலரும் தேடி வருகிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் சங்கர நாராயணன், தம் அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவக் குறிப்புகளை வழங்கி வருகிறார். இன்றைய நம் உரையாடலில், சர்க்கரை நோய்க்கு உள்ள இயற்கையான தீர்வுகளை விவரிக்கிறார். தமக்கு நீரிழிவு நோய் வந்தபோது கடைப்பிடித்த மருத்துவ முறைகள், உணவு முறைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றை யாவரும் பயனுறும் வண்ணம் பகிர்கின்றார். இதை நீங்களும் முயன்று பாருங்கள். உங்களுக்கு எத்தகைய குணம் கிடைத்தது என்று எழுதுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.