மு. ஆனந்தகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு

தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றியவர் கல்வியாளர் மு. ஆனந்தகிருஷ்ணன். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் அறங்காவலர்களில் ஒருவாக இருந்த இவர், நூலகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். உயர் கல்வி, மொழி, இலக்கியம், பொறியியல் முதலியவற்றை ஊக்குவிக்கும் எண்ணற்ற முயற்சிகளுக்கு இவர் உந்துவிசையாக இருந்துள்ளார். இவர் பெயரில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது.

வரும் ஆகஸ்ட 01, செவ்வாய்க்கிழமை அன்று மு. ஆனந்தகிருஷ்ணன் அறக்கட்டளைச் சொற்பொழிவின் ஒரு பகுதியாக பொறியாளர் மு. இராமனாதன் அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு, அதன் பொறியியல் சிறப்பு, தற்போதைய சவால்கள், சட்டச் சிக்கல்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் முதலியவை குறித்து, ‘பெரியாறு அணை – பொறியியலும் அரசியலும்’ என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார்.

மு. இராமனாதன் லண்டனில் பட்டயப் பொறியாளராகவும் ஹாங்காங்கில் பதிவுசெய்யப்பட்ட பொறியாளராகவும் இருப்பவர். பல்வேறு நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தப்பட்டபோது அதில் பணியாற்றியவர்.

இந்தச் சொற்பொழிவில் அனைவரும் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

நாள்: 01 ஆகஸ்ட் 2023 (செவ்வாய் கிழமை)
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

அன்புடன்,
க. சுந்தர், இயக்குநர்,
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *