அம்பத்தூர் பூங்காவில் வாராவாரம் சிரிப்பு – செய்திகள்
மனிதன் தன் அனைத்துக் கவலைகளையும் மறந்து செய்யும் ஒரே செயல் சிரிப்பத்து மட்டும் தான். நாமும் சிரித்து நம்மை சுற்றியுள்ளவர்களையும்
சிரிக்கவைத்து மகிச்சியுடன் வாழ சிறப்பான சிரிப்பு யோகாவை
கற்றுக்கொள்ளுங்கள். கவலைகளை மறந்து நோய்நொடிகள் நீங்கி களிப்புடன் வாழுங்கள். அம்பத்தூர் கிருஷ்ணபுரம் பூங்காவில் வாராவாரம் ஞாயிறு காலை ஆறு மணி முதல் ஆறரை மணி வரை சிரிப்பானந்தா அவர்களால் இலவசமாகக் கற்றுத்தரப்படும் ‘சிரிப்பு யோகா’ பயிற்சியில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.