திருவருள் சுரந்து காத்திடு முருகா!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

பெற்ற வரத்தைப் பேணிடா நின்று
குற்றம் இழைத்தார் கொடிய அசுரர்
அசுரர் மாற அவதாரம் செய்தாய்
ஆறு முகவா அடிதொழு கின்றோம்

மாறாச் சூரர் மாறிட வைத்தாய்
சேவலாய் மயிலாய் உன்வசம் ஆக்கினாய்
அருளைக் கொடுத்தாய் ஆணவம் போக்கினாய்
அரனின் மைந்தா அழகுடைக் குமரா

வேலை ஏந்தினாய் வெற்றியைக் காட்டினாய்
மூலப் பொருளாய் ஆகியும் நின்றாய்
வேதம் விளக்கினாய் விண்ணவர்க்கு உதவினாய்
பாதம் பணிகிறோம் பார்த்திடு முருகையா

ஓடி ஓடி உன்னடி தொழுகிறோம்
பாடிப் பாடிப் பரவசம் அடைகிறோம்
தேடித் தேடி உன்னிடம் வருகிறோம்
திருவருள் சுரந்து காத்திடு முருகா

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *