செண்பக ஜெகதீசன்
வண்ண மலர்த் தோட்டத்தில்
வந்து சென்ற தென்றலது
வாரிச் சுருட்டிச் சென்றது
வாசனையை..
வழி தெரிந்து விட்டது
வண்டிற்கு..
காற்று செல்கிறது
காதலைப் பரப்பிக் கொண்டே…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…