நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி(12)
தி.சுபாஷிணி
காலம்பல கடந்து சென்று ஒழிய
கனத்திறங் கற்றெருமை கன்றுக் கிரங்க
காற்றுவரு வழியும் தூற்றி தூசுநீக்க
கடுங்குளிர் நீர்தெளித்து கோலம் இட்டு
கொடுங்கோ ராவணன் செருவென்ற கோவிந்தனைக்
காட்டுவாயெனக் காத்திருக்கின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி : http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=4173