மலர் சபா

புகார்க்காண்டம் – 03. அரங்கேற்று காதை

யாழ்ப் புலவன்

ஏழிசைதனை
இருவரிசைகளாக்கிச் செய்யப்பட்ட
‘செம்முறைக் கேள்வி’ என்னும்
சிறப்புப் பெயர் பெற்றது யாழ்.

செம்பாலை முதலிய
எழுபாலைப் பண்களையும்
அவற்றுக்கிடையே தோன்றும்
ஐந்து அந்தரப்பாலைப் பண்களையும்
அவற்றின் இணை நரம்புகளையும்
அணைத்து இசைத்துச் சென்றிடும் யாழ்.

இசைத்தமிழின் இலக்கணங்கள்
இம்மியளவும் குறைந்திடாது
வட்டப்பாலையென இசைத்து
அளவைகளின் அழகோடு
அரங்கேற்றுவது யாழ்.

வட்டப்பாலை முடியும் இடத்து
வன்மையாய் நிற்பது ‘தாரம்’.
வட்டப்பாலை தொடங்கும் இடத்து
மென்மையாய் நிற்பது ‘குரல்’.

‘தாரம்’ எனும் இசை அழகிக்குரியவை
அலகுகள் இரண்டு.
‘குரல்’ எனும் இசை மகளுக்குரியவை
அலகுகள் நான்கு.

தாரம் அதன் அலகுகள்
இரண்டில் ஒன்றையும் (1)
குரல் அதன் அலகுகள்
நான்கில் இரண்டையும் (2)
கூட்டியே (1+2 = 3)
தார நரம்பில்
மூன்று (3) அலகுடைய
இனிய இசையை
உண்டாக்கியவிடத்துத்
தோன்றினள் ‘கைக்கிளை ‘ எனும்
இசை அணங்கு.

தாரம் எனும்
மெய்க்கிளை நரம்பு
கைக்கிளையாகி நின்றது இங்ஙனம்.

(தாரம் 1 அலகு + குரல் 2 அலகு = கைக்கிளை)

தாரம் என்னும் இசைத்தாய்
பொலிவுடன் வலிவும் உடையவள்;
தன்னிடம் எஞ்சியிருந்த
ஓர் அலகை
அருகில் இருந்த
‘விளரி’ என்பாளுக்கு வழங்கினள்;
இவ்வழியே
‘விளரி’ தன் தன்மையது மாறித்
‘துத்தம்’ எனும் நரம்பாகிப் போயினள்

அதுபோலவே
குரல் இளி உழை முதலான
ஏனைய இசை மகளிரும்
தத்தமக்கு ஏற்ற
கிளைஞர் இடங்களை எய்தினர்.
செம்முறை மாறிப்போய்
இங்ஙனம்
பதினான்கு கோவையானது
யாழ்ப் புலவன் இசைக்கும் போது.

உழை இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை
இவை கிளைத்த வழியில்
மென்மையாய் நான்கும்
சமனாய் ஏழும்
வன்மையாய் மூன்றும்
இவை பதினான்கு கோவை.

உழை நின்றது முதல் இடம்.
கைக்கிளை நின்றது இறுதி இடம்.

இப்புதிய கோவைகளாலே தோன்றின
செம்பாலை முதலிய புதிய பண்கள்
புதியதொரு மரபினிலே
யாழிசை தன்னிலே.

(யாழ்ப் புலவன் தலைப்பில் முதல் தொகுப்பு இது..அடுத்த தொகுப்பு அடுத்த பகுதியில் தொடரும்.)

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகார வரிகள் இங்கே 70 – 81:

 

 
படத்துக்கு நன்றி:
 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *