யுகநிதி, மேட்டுப்பாளையம்
Yuganidhi
ரகசியம்

ஒரு
சூரியப் பொழுதில்
உன்னை
அழைத்தேன்
என் காதலைச்
சொல்வதற்காக.

வானில்
நிலா இல்லாத
இரவில்
சந்திக்கச் சொன்னாய்.

சந்தித்தேன்.

நீ
சொன்ன பிறகுதான்
தெரிந்தது
காதல்கூட அல்ல
காதலின் மொழி
ரகசியமாய் இருப்பதே
சுகமானதென்று..!

அவள்

என்
அவள் வரும்
விடியலுக்காகக்
காத்திருந்தேன்..

அந்தியில் வந்தாள்
எல்லாம் இழந்து.
என்னைப் போலவே..!

நண்பனே..

நண்பனே..

என் இரத்த உறவுகளை
வாசித்துப் பார்..
பின்
யோசித்துச் சொல்..
அதன் பிறகு
ஏற்றுக்கொள்கிறேன்
உன் காதலை..!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *