பாகம்பிரியாள்
நம் காதல் உலகில், அங்கும் இங்கும்
பார்க்கும் கம்பீர சேவலாய் வலம் வந்தேன்.
சிறு வார்த்தைப் பொறி ஒன்று நம்மை உசுப்பிவிட,
இறுதியில்  சொலவதற்கு ஏதுமின்றி உன் மௌனத்தை
இற்க்கி வைத்துவிட்டு நீ வெளியேறினாய்.
அதை கையில் எடுத்து, பின் நெஞ்சுக்கு மாற்றி,
இப்போது என் வயிற்றில் வைத்து,
 அடை காத்துக் கொண்டிருக்கிறேன்.  
சாப்பிடவும் முடியாமல், தூக்கமும் வராமல்!
மௌனத்தை உன்னிடம் தந்து விட்டு,
செல்லமாய்  சண்டையிடும்  சேவலாய் மீண்டும்
மாறக் காத்து கொண்டிருக்கிறேன்.
எப்போது நீ வருவாய் என சொல்லி அனுப்பு .  

படத்துக்கு நன்றி
 
http://www.colourbox.com/image/portrait-of-a-cock-image-2577079

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சேவலாய் மீண்டும்!

  1. சோகம் வந்தாலும்….சுகம் வந்தாலும்…சேவல் சேவல்தான். பொறுமை கொள்…வெறுமை நீங்கும்.

  2. இடம் மாறினாலும் மௌனம்,
    தடம் மாறிடாத
    தரமான கவிதை..
    வாழ்த்துக்கள்…!

           -செண்பக ஜெகதீசன்…

  3. பாராட்டிய திரு முகில் தினகரன் அவர்களுக்கும், திரு செண்பக ஜெகதீசன் அவர்களுக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *