பிச்சினிக்காடு இளங்கோ

  செவிகளில் விழுந்த
  தேன்மொழிச்சொற்கள் போதும்
  உன் முகவரிசொல்ல

 சொற்களில் கரையும்
 உண்மையும் அன்பும்
 என்னையும்
 கரைக்கிறது

 கல்லாயிருந்த நான்
 கரைகிறேன் என்றால்
 சொற்களின் வலிமைதான்

 உள்ளம் வெள்ளை
 சொற்களோ வெல்லம்
 இணைந்த மலராய்த்
 தெரிகிறாய் செவிகளில்
 
 உன்சொல்லோடு
 வருகிறதே ஒரு சுகம்
 அது
 உன் சுவாசம்.

 அதை
 எத்தனை
 யுகங்களையிழந்தும் பெறுவதில்லை
 
 உன்
 கடமையும் பொறுப்பும்
 ஈர்ப்பும் ஈடுபாடும்
 என்னைத்
 தலைவணங்கவைக்கிறது

 நிமிர்ந்துபேச
 என்னிடம் எதுவுமில்லை
 உன்னைப்போல்

உன்னைத்தவிர
ஒரு தகுதியுமில்லை
என்னை
உயர்த்திக்கொள்ள

சரணும் ஆகலாம்
முரணும் ஆகலாம்
எனக்கென்னவோ
சரணே தரும் சாந்தியை

படத்துக்கு நன்றி

http://www.shutterstock.com/pic-39162007/stock-photo-lovely-background-image-with-statue-of-indian-girl-useful-design-element.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சொற்சிலை

  1. சரண் என்றால் சாந்தி….முரண் என்றால் மோட்சம் என்று கூட வைத்து கொள்ளலாமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *