-செண்பக ஜெகதீசன்-

ஆடும் குட்டியும் கிடையிலே
அடித்திட ஓநாய் இடையிலே,
தேடும் மேய்ப்பன் நடுவிலே
திகைத்து நிற்கும் திருடனே,
ஓடும் பாம்பும் பதுங்கிட
உள்ளே வந்தது கீரியும்,
கூடும் துன்பம் அனைத்தையும்
குறைத்திட வருபவன் இறைவனே…!
படத்துக்கு நன்றி: http://www.facebook.com/pages/I-Believe-In-God-/157310268082?sk=notes
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…