துன்பம் தொடராமல்…
-செண்பக ஜெகதீசன்-
ஆடும் குட்டியும் கிடையிலே
அடித்திட ஓநாய் இடையிலே,
தேடும் மேய்ப்பன் நடுவிலே
திகைத்து நிற்கும் திருடனே,
ஓடும் பாம்பும் பதுங்கிட
உள்ளே வந்தது கீரியும்,
கூடும் துன்பம் அனைத்தையும்
குறைத்திட வருபவன் இறைவனே…!
படத்துக்கு நன்றி: http://www.facebook.com/pages/I-Believe-In-God-/157310268082?sk=notes