செண்பக ஜெகதீசன்

ஆம்பிள்ளய அதிகமாத்தான் நம்பிக்கெடாதே

அசிங்கப்பட்டு வாழ்க்கையிலே நொந்துவிடாதே,

காம்பிருக்க சுளைவிழுங்கும் பிறவிகதாண்டி

கண்மூடிப் போயிடாதே வேலியத்தாண்டி..

(ஆம்பிள்ளய..)

 

ஆயிரமாச் சத்தியங்கள் செய்திடுவாங்க

அத்தனையும் சத்தியமாய் நம்பிவிடாதே,

பாயும்புலி போலவேதான் பதுங்கிடுவாங்க- தனியே

பக்குவமாய்ப் பேசியபின் ஒதுங்கிடுவாங்க..

 

ஓவியமே நீயெனத்தான் கதைவிடுவாங்க

உயிரக்கூட விடுவேண்ணு வாயடிப்பாங்க,

தேவதையே நீதானுண்ணு ஏத்திடுவாங்க- பின்னே

தேவையில்ல நீயெனவே மாத்திடுவாங்க..

(ஆம்பிள்ளய..)

 

சொத்துசொகம் வேணாமுண்ணு சொல்லிடுவாங்க

சொத்தெல்லாம் நீதாண்ணு சுத்திடுவாங்க,

மத்ததெல்லாம் முடிஞ்சபின்னே மாறிடுவாங்க- உன்

மானமெல்லாம் போகக்கரை ஏறிடுவாங்க..

 

பேப்பரிலே பாப்பதெல்லாம் பொய்யிணுவாங்க

பேய்பிடிச்சி நீயலைய விட்டீடுவாங்க,

ஆப்பசைச்ச கொரங்குபோல மாட்டிக்கிடாதே- அதுக்கு

அப்புறமா அவப்பெயரச் சூட்டிக்கிடாதே..

(ஆம்பிள்ளய..)

 

அப்பாஅம்மா சொல்லக்கேக்கத் தவறிவிடாதே

ஆசைப்பட்டு வாழ்க்கையிலே இடறிவிடாதே,

எப்பவுமே நல்லதையே மறந்துவிடாதே- இதை

ஏத்துக்கிட்டா வாழ்க்கையுந்தான்  சிறந்துவிடாதோ…

(ஆம்பிள்ளய..)

படத்துக்கு நன்றி

http://cutcaster.com/photo/901762805-Happy-Indian-woman/

 


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *