-D.சச்சிதானந்தம்-

 

முதல் பகுதி இங்கே

 

அடிமனக் கடலின் அமுதே போற்றி,

அறுமுக நிலவின் ஒளியே போற்றி,

அதிமது ரத்தின் சுவையே போற்றி,

அருள்மனம் பொங்கி அருள்வாய் போற்றி!                                                                     6

 

கவிமனம் கொண்ட கந்தா போற்றி,

குவிமனம் என்றாய் குகனே போற்றி,

செவியினில் மந்திரம் சொன்னாய் போற்றி,

புவியினைக் காக்கும் புதல்வா போற்றி!                                                                          7

 

அகமிகுங் குகனின் நினைவே போற்றி,

மிகமிகு மவனின் கருணை போற்றி,

முகமிகு முறுவல் தருவோன் போற்றி,

சுகமிகு மவனை நினைந்தே போற்றி!                                                                              8

 

இளமுறு வல்தரு வள்ளல் போற்றி,

வளமுறு மில்தரு மன்னன் போற்றி,

உளமுறு மல்லல் கொல்வோன் போற்றி,

குளமுறுங் கமலக் குழவியே போற்றி!                                                                             9

 

தண்டம் கொண்ட தருவே போற்றி,

அண்டம் காக்கும் உருவே போற்றி,

கண்டம் கறுத்தவன் மைந்தா போற்றி,

கொண்டோம் மனதில் உன்னைப் போற்றி!                                                                      10

 

படத்துக்கு நன்றி: http://www.hindudevotionalblog.com/2012/12/hindu-god-subramanya-pictures.html

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அறுமுகநூறு (2)

  1. இளமுறுவல் – வளமுறுமில் – உளமுறுமல்லல் – குளமுறுங்கமலம் 

    சொல்விளையாட்டில் ஆறடித்திருக்கிறாய் நண்பா! 

    வாழ்த்துகள்!

  2. பார்வதி ராமச்சந்திரன், தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *