செண்பக ஜெகதீசன்
வாரத்தில் ஒருநாள்
விடுமுறை நாள்..
மாதத்தில் ஒருநாள்
சம்பள நாள்..
வருடத்தில் ஒருநாள்
பிறந்தநாள்..
வாழ்க்கையில் ஒருநாள்
இறந்திடும் நாள்..
ஆனாலும்,
அனுதினமும் மனிதர்பலர்
அஞ்சியஞ்சி சாகிறாரே
அது ஏன்…!
படத்துக்கு நன்றி
http://www.iappfind.com/app/411900526
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…