சு.ரவி
வணக்கம், வாழியநலம்
நேற்றைய முழுநிலா வடமாநிலங்களில் புத்த பூர்ணிமாவாகக் குறிக்கப் பட்டுள்ளது.
அன்பு, அறம், அஹிம்ஸை, அவா அறுத்தல் என எளிமையும், வலிமையும் நிறைந்த
வழிமுறைகளைப் போதித்த மஹான்!
சித்தார்த்தன் புத்தராகப் பரிணாமம் பெற்றது இந்த பாரத மண்ணிலே எனினும், இவர் தூவிய விதைகள்
பரவிச் செழித்ததென்னவோ கிழக்காசிய நாடுகளிலே!
(புத்தரையும், இந்துமதம் தனது கடவுளின் அவதாரங்களில் ஒன்றாக உள்வாங்கி விழுங்கிவிட்டதோ!)
அமைதிதவழும் புத்தரின் சாந்தமுகம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று!
வண்ணப்படமாக இணைப்பில்..
பார்க்க, ரசிக்க


Leave a Reply