செண்பக ஜெகதீசன்
இறைவன் எழுதிய கவிதையை
இசையமைத்துப் பாடிடும்
வானம்பாடியும்,
கானக் குயிலும்..
மனப்பாடம் செய்திடும்
மாந்தோப்புக் கிளிகள்..
நடை பயின்று
நாட்டியத்தில் காட்டிடும்
வண்ண மயில்கள்..
அந்த
வேடமிட்டு நடிக்கும்
வான்கோழிகள்..
எல்லாம்
ஒன்றாய்ச் செய்யும் மனிதன்,
நன்றாய் இல்லையே குணத்தில்
ஒன்றியே உள்ளானே பணத்தில்…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
/////நன்றாய் இல்லையே குணத்தில்
ஒன்றியே உள்ளானே பணத்தில்…!/////
உண்மை. பணத்தில் ஒன்றிய மனித மனங்களில், நற்குணத்தின் மதிப்பு உணரப்பட வேண்டும். பகிர்விற்கு மிக்க நன்றி.
பார்வதி இராமச்சந்திரன் அவர்களின்
கருத்துரைக்கு மிக்க நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…