‘வெல்ல வைக்கும் வேலன்’ திரு செண்பக ஜெகதீசன் அவர்களின் வல்லமைக்கான 100 வது படைப்பு. வாழ்த்துக்கள். தொடர்ந்து இன்னும் பல நூறு கவிபாடி அனைவரையும் மகிழ்விக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அன்புடன்
ஆசிரியர்
அலைவந்து பாடுதடி
அறுமுகனின் பேர்சொல்லி – அழகுச்
சிலைவடிவில் அருள்தருவான்
சிவன்மகன்தான் செந்திலிலே…
(அலைவந்து..)
நிலையில்லா வாழ்வினிலே
நிலைத்திருப்போன் அவனல்லவா,
விலைமதிப்பு ஏதுமில்லா
வேலுமணி அவனல்லவா…
(அலைவந்து..)
சந்தனத்தில் குளிக்கின்றான்
சவ்வாது பூசிடுவான்,
அந்திவானச் சந்திரன்போல்
அருளொளிதான் தந்திடுவான்..
தந்தைகுரு அவனல்லவா
தந்தையும்தான் சிவனல்லவா,
வந்தனைகள் செய்வோர்க்கே
வரமருளும் குகனல்லவா…
(அலைவந்து..)
கூடிவரும் பக்தரெல்லாம்
கும்பிட்டுப் பலன்பெறுவார்,
தேடிவந்த பொருள்பெறுவார்
தெய்வத்தின் அருள்பெறுவார்,
வேடிக்கைக் கதையில்லை,
வெல்லவைப்பான் வேலவன்தான்
எல்லையில்லாக் கருணையாலே…
(அலைவந்து..)
படத்துக்கு நன்றி


Leave a Reply