செயலர்
பிரான்சு கம்பன் கழகம்.
பதிவாசிரியரைப் பற்றி
பெஞ்சமின் லெபோ
இயற் பெயர் : பெஞ்சமின்
குடும்பப் பெயர் : லெபோ (LE BEAU = அழகு)
பிறப்பு & வளர்ப்பு :
ஆனந்தரங்கம் பிள்ளை முதல் பாவேந்தர் பாரதிதாசனார் ஈறாகத் தமிழ்ப் பயிர் வளர்த்த புதுச்சேரி
படிப்பு : அனைத்தும் புகழ் பெற்ற கல்விக் கூடங்கள்
– புதுச்சேரி : பெத்திசெமினரி உயர்நிலைப் பள்ளி ; தாகூர் கலைக் கல்லூரி
– சென்னை : இலயோலா (இளங்கலை அறிவியல்) ; பச்சையப்பன் (முதுகலை – தமிழ்)
– பாம்பே : (அஞ்சல் வழி) BIET (British Institute of Engineering and Technology) மின்னியல் (Electronics)
– திருப்பதி : (அஞ்சல் வழி) முதுகலை – ஆங்கிலம்
– திருவனந்தபுரம் : கேரளப் பல்கலைக்கழகம் (பட்டயப் படிப்பு ) மொழி இயல்
– சென்னைப் பல்கலைக் கழகம் : முனைவர் மு.வ அவர்களின் மாணாக்கன்
– கேரளப் பல்கலைக் கழகம் : முனைவர் வி.ஐ சுப்பிரமணியன் அவர்களின் மாணாக்கன்
– புதுத் தில்லி : (அஞ்சல் வழி) Academie française de Delhi : முதுநிலை பட்டயப் படிப்பு : பிரஞ்சு.
பணிகள் :
– புதுச்சேரி, காரைக்கால் அரசினர் கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்
– கிழக்கு ஆப்பிரிக்க (ழிபுத்தி) நாட்டில் பிரஞ்சு வங்கி ‘Banque Indosuez’ -இல்
முது நிலை அதிகாரி
– பிரான்சு : பாரீசில் உள்ள புகழ் பெற்ற (La mode) நிறுவனம் ‘Christian Lacroix’ -இன் நிர்வாகத் துறையில் உயர்பதவி (Aminstrator)
– இந்த ஆண்டு முதல் பணி நிறைவு.
பொதுப் பணிகள் :
– பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர்
– இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகத்தின் செயற்குழு (மூத்த) உறுப்பினர்)
– கலை, இலக்கிய, அறிவியல் எழுத்தாளர். (இணைய தளங்கள் பலவற்றில் எழுதி வருபவர்)
– முத்தமிழ்ச் சங்கம், இலக்கியத் தேடல், பிரான்சு கண்ணதாசன் கழகம் …போன்ற பல சங்கங்களின் ஆலோசகர்
– (இலக்கிய) மேடைப் பேச்சாளர், கலை, நாட்டிய நிகழ்ச்சிகள்… தொகுப்பாளர், பட்டி மன்றங்களில் நடுவர் , கருத்தரங்குகளில் தலைவர், கழகங்களுக்கு வழிகாட்டி …
– ஆன்மீகப் பணிகள் : கத்தோலிக்கக் கிறித்துவர்களின் தலைவர் ; பிரஞ்சுப் பங்கில் (white parish) உறுப்பினர்.
– கணி வல்லுநர் : கணிப் பொறியை அக்கக்காய்ப் பிரிக்கவும் பூட்டவும் அறிந்தவர், இணைய தளங்களை உருவாக்குபவர், ‘ graphics’ தெரிந்தவர்
– சிறு வயது முதலே ஒளிப் படக் கலையில் (‘photography’) ஈடுபாடு உண்டு. இப்போதும் அது தொடர்கிறது.
– பிரான்சில் தமிழ் வளர்க்கும் பணி .
எழுத்துப் பணிகள் :
– முதல் படைப்பே முதல் பரிசை வாங்கித் தந்தது ; 1965 – இல் கல்லூரி மாணவர்களுக்காகக் கலைக்கதிர் என்னும் அறிவியல் பத்திரிகை கட்டுரைப் போட்டி நடத்தியது. ‘ஆக்க வேலையில் அணுச் சக்தி’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது.
– 1992 -இல் பாவேந்தர் பாரதிதாசனாரின் நூற்றாண்டு விழா பாரீசில் நடைபெற்றது அதன் தொடர்பாக உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பொது மக்கள் கட்டுரைப் போட்டியில் இவருடைய கட்டுரை ‘கவிஞனின் காதலி’ முதல் பரிசைப் பெற்றது.
– இவை இரண்டுக்கும் இடையே ஏராளமான கதைகள், கட்டுரைகள் பல பரிசுகளை வென்றுள்ளன.
– ‘எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கு அது பொருத்தமா? ‘ என்னும் தலைப்பில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, 2010 -இல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு தமிழக அரசு அழைப்பு அனுப்பியது. பிரான்சில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐவர் மட்டுமே. அவர்களுள் இவரும் ஒருவர்.
பரபிரமத்தையே நாயகனாக்கி; இந்த மானுடம் வெல்ல; உலகில் உள்ள மனிதனை எல்லாம் உள்நோக்கியப் பயணம் போக; நாடும், மக்களும், மன்னனும், உலகை பற்றிய உள்ளுணர்வும் எப்படி எல்லாம் இருக்க வேண்டும்.
தனிமனித புற வாழ்வு எத்தகைய விழுமியங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் தனது பெருங் காப்பியத்தின் வழியே உலக மாந்தர்களுக்கெல்லாம் வழிகாட்டிய உலக கவிச்சக்ரவர்த்திகளில் எல்லாம் தலை சிறந்த மகாகவிச்சக்ரவர்த்தியின் நினைவாக எடுக்கப் படும் இந்த வாழ்விற்கு எனது வாழ்த்துக்கள்!
கம்பன் அவன் குறியீடுகளாய் சொன்ன யாவற்றையும் செயல் முறையில் செய்தும் காட்டி இந்த உலகையே ”விழுமின் எழுமின்” என்று அறைகூவல் விட்ட மகாவீரத் துறவியின் கீர்த்தியும் போற்றப்படுவது இரட்டிப்பு மகிழ்ச்சி.
இந்த அருமையான நிகழ்வை முன்னின்று நடத்தும் தலைவர் நண்பர்! கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களுக்கும், உங்களுக்கும் ஏனைய சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியும் பாராட்டுகளும்.
கம்பன் விழாவின் ஒளி ஒலி காட்சிகளை காண வழிவகை செய்து உலகெங்கும் வாழும் தமிழர் பெருமக்கள் கண்டு உவகை எய்த வழிவகை செய்ய வேண்டிக் கொள்கிறேன்.
வாழ்க! வளர்க!! உயரிய இத்தொண்டு!!!
அன்பிற்கினிய நண்பருக்கு
வணக்கம்.
கம்பனைப் போலொரு கவிஞன்
காசினியில் வேறு யாருண்டு!
செம்பொன் அனைய சொற்கள்
செப்பியவர் வேறு யாருண்டு!
அம்புவியில் அவன்புகழ் அழியாது
அன்றும் இன்றும்எப்போதும்
செம்பு சேராத் தங்கம்
தமிழுக்கு அவனே சிங்கம்!
கம்பனுக்கு ஆண்டு தோறும் விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம்.
அதனை பாராட்டும் தங்கள் அன்பு உள்ளத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
வாழ்க வளமுடன் !
பெஞ்சமின்
கம்பன் விழா பிரான்சில் சிறப்பாக நடத்தப்படுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. விழா குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும். விழா நிகழ்வுகளை ஒரு சிறு கட்டுரைத் தொகுப்பாக வல்லமையில் வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நலமிகு நண்பர் சச்சி அவர்களுக்கு
வணக்கம்!
பிரான்சு கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவுக்குத்
தாங்கள் எழுதிய பின்னூட்டத்துக்கு நன்றி.
நாங்கள் நடத்தும் எல்லா விழாக்களுக்கும் நேரடி வருணனை எழுதி
இணையதளங்களில் வெளியிடுவது என் வழக்கம்.
அதன் படி இந்த விழாவுக்கும் வருணனை வரும்.
வழக்கம் போல் உரைகள் ‘youtube’ -இல் காணலாம்.
அன்புடன்
பெஞ்சமின்