மலர்சபா

 

*புகார்க் காண்டம் – 10. நாடுகாண் காதை*

 

இந்திரவிகாரங்களை வணங்கிப் போதல்!..

 

கோயிலைக் கடந்த பின்

கோவலனும் கண்ணகியும்,

உயர்ந்த ஐந்து பெரிய கிளைகளையும்

பசுமையான இலைகளையும் உடைய

சிறப்புப் பொருந்திய மகாபோதி மரத்தின்

அழகு வாய்ந்த நிழலிலே

எழுந்தருளிய புத்ததேவன்

அருளிச்செய்த பிடகநூலதன் கருத்துகளை

விண்ணில் இருந்து மண்ணுக்கு

இறங்கி வந்த சாரணர்

மக்களுக்கு ஓதி விளக்கி உரைக்கும்

இந்திரன் ஆக்கிவைத்த விகாரங்கள் ஏழினையும்

வலம் வந்து சென்றனர்.

 

“சிலாதலத்தைத் தொழுது வலம் கொள்ளல்”

 

*அதன்பின் அவர்கள்

அருகதேவன் கோயிலான

ஸ்ரீகோயிலை அடைந்தனர்.

புலால் உணவைக் கைவிட்டு

பொய்கூறாத நோன்பினைக் கடைப்பிடித்து

அழுக்காறு அவா முதலியன நீத்து

ஐம்புலன்களையும் அடக்கிய கொள்கையராய்

உண்மைமைத்திறனை அறிந்த சீரிய சமணர்

கூடும் அக்கோயிலில்….

 

பஞ்சபரமேட்டிகள் தங்குகின்ற

ஐந்து சந்திகள் ஒன்றாகக் கூடுகின்ற

இடத்தில் இருந்த

பெரிய மன்றமதனில்

 

பொன்னிறப் பூக்களுடன் தழைத்திருந்த

அசோக மரத்தின் அடர்ந்த நிழலில்

திருமஞ்சன நீராட்டு விழா அன்றும்

தேர்த்திருவிழாவின் போதும்

ஆகாயத்திலிருந்து சாரணர்கள் வரக்கூடும்

என்றேதான் கருதிய இல்லற மகளிரான

சாவகர் பலரும் கூடிநின்ற

ஒளிபொருந்திய சந்திர காந்தக் கல்லால் செய்த

ஆசன மேடையைக்

கோவலனும் கண்ணகியும் வலம் வந்து வணங்கினர்.

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 11 – 25

 

http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *