காத்திருப்பில் கலங்காதே …

0

-தனுசு-

கொல்லிமலை காட்டுக்குள்ள
மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
மூணு நாளா தவிச்சிருக்கு -என்
முகம் காண துடிச்சிருக்கு.

பச்சரிசி சோறோடு
கருவாட்டு குழம்பாக்கி
தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
ஒத்தையிலே காத்திருக்கு.

உச்சந்தலை கூந்தலிலே
கட்டிவச்ச கருப்பு!
நெற்றியெனும் முற்றத்திலே
பொட்டு வச்ச வனப்பு !

கண்ணுக்குள் குடிவந்த
கடல்மீனின் துடிப்பு!
கன்னக் கதுப்பினில்
உப்பியிருக்கும் செழிப்பு!

வெளஞ்ச சோளக்கொல்லை
போல உந்தன் உடம்பு!
மெலிந்த உதட்டோரம்
மின்னுமடி சிவப்பு!

நிமிர்ந்து நடந்தாலே -சுவைக்கும்
மாங்கனி நினைப்பு!
இத்தனையும் பார்த்தாலே -மனசில்
வைக்குமடி நெருப்பு!

மலரும் நினைவினில் -உன்முகம்
உலர வேண்டாமடி
புலரும் பொழுதிதில் -விலகும்
உன் வருத்தமடி!

கொஞ்சிப்பேச வாரேனடி
கொஞ்சம் பொறு மயிலே!
கூட்டிக் கொண்டு வாரேன்
குளிர்காயும் நிலவை!

கொக்கரொக்கோ கூவும்வரை
நித்திரைக்கு தடை சொல்ல
வில்லாளன் வாரேனடி
வன வேட்டை முடித்து.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.