செண்பக ஜெகதீசன்images

அன்று தேவன் எழுதிய எழுத்து- அதை
அழித்திட நினைப்பது ஆகுமோ பெண்ணே,
தொன்று நிகழ்ந்ததின் தொடர்ச்சியிவ் வாழ்வு- அதைத்
தொலைத்திடத் திட்டம் தகுமோ கண்ணே..

நாளை நடப்பதை நன்றாய் அறிவான்- அவன்
நம்மைப் படைத்தவன் நன்கறி தம்பி,
காளைப் பருவம் வாழ்வினில் கொஞ்சம்- அதில்
கவலைத் தீயில் கருகிடாய் வெம்பி..

ஆடும் பம்பரம் அகிலம் மீதுநாம்- அதை
ஆட்டும் ஒருவனை அறிவையோ அண்ணா,
நாடும் வீடும் நம்முடன் வருமா-அந்த
நிலையிலா வாழ்வை நினைப்பயோ கண்ணா..

கடலலை இரைச்சல் காதைப் பிளக்கும்- அதைக்
கருத்தில் கொளாதே கலம்விடு நண்பா,
உடலெனும் காவில் உணர்ச்சிப் பூக்கள்- அவை
உதிரச் செய்வது உயர்ந்தவர் பண்பா…!

படத்துக்கு நன்றி

    http://www.virginiarowing.com/ 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஏனடா கவலை…

  1. //கடலலை இரைச்சல் காதைப் பிளக்கும்- அதைக்
    கருத்தில் கொளாதே கலம்விடு நண்பா,
    உடலெனும் காவில் உணர்ச்சிப் பூக்கள்- அவை
    உதிரச் செய்வது உயர்ந்தவர் பண்பா…!//

    மிகவும் அழகான வரிகள். வாழ்த்துக்கள் திரு,செண்பக ஜெகதீசன்.

  2. வாழ்த்துரை வழங்கிய நண்பர் சச்சிதானந்தத்திற்கு
    என் நன்றிகள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.