கண்டேன் கண்டேன் காண்கின்றேன்

கண்டேன் கண்டேன் காண்கின்றேன்
கண்களுக்கினியானய் காதற்பெருக்கினால்()

வண்டுகள் விழியத‌னாற் மனங்குடைந்தான்
உண்டுகள் அதரங்கள் வழிந்திட அழைக்கிறான்
கண்டுமுன் காணாமல் நடிக்கிறான்
நண்டுதன் கொடுக்குபோல் வாரியே அணைக்கிறான் ஆகா ()

அசைந்திடும் மயிற்பீலி வசமிடதொடுத்தான்
இசைத்திடும் குழல்ராகம் மயக்கிட சிரித்தான்
பசையினில் என்னுடன் கலந்து களிக்கிறான்
விசையெனும் பக்தியில் என்னையும் இயக்கினான் ஆகா ()

தேடிடும் போதெதிர் வந்தெழில்ரசிக்கிறான்
ஏடிடும் முன்இவனே கவிதைப் படிக்கிறான்
கூடிடும் தாளமும் தட்டிதலை அசைக்கிறான்
பாடிடும் என்னோடு கண்ணனும் இருக்கிறான் ஆகா ()

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *