திருமால் திருப்புகழ் (17)
கிரேசி மோகன்
தனன தானதத்த தனனதானதத்த
தனன தானதத்த -தனதான
சிறிய நானகற்றி பெரியஞானமுற்று
அருணை வாசியர்க்கு-மகனான
ரமண வாயுரைத்த ரமிய மானநிட்டை
ருசியை நானும்பெற்று-நலம்காண
சிறகை வான்விரித்து வினதை சேய்பறக்க
முதலை வாயிருக்கும்-களிறோனின்,
உயிரை வாழவைக்க சுழலும் ஆழிசக்ரம்
எறிய வேகமுற்று-விரைவோனே
குறைய பூகனத்தை உருளும் தேர்நடத்தி,
பெரிய பாரதத்தின்-களமேகி
விஜய னாரவத்தை விலக சோர்வகற்றும்,
புனித கீதைசெப்பும்-இடையோனே
கரிய வானையொத்த நெடிய மேனிநித்ரை
சரிய ஆழிசொக்கும் -சுகவாசி
பெரிய பாளயத்தி பெரிய சோதரத்வ,
அருள வாமனத்துள்-பெருமாளே
—————————————————————————–